அநுராதபுரம் - பாதெனிய வீதியில் அம்பன்பொல பஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹாவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.
இவர் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் தூக்கி வீசப்பட்டு எதிர்திசையில் வந்த காரில் மோதி காயமடைந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மூவரும் அம்பன்பொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி மற்றும் பிள்ளை மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அம்பன்பொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM