(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச மற்றும் தேசிய இணக்கப்பாடுகள் இருந்தாலும்,அவை முறையாக செயற்படுவதில்லை.
அத்துடன் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கும்,வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கும் பெண்களின் பங்கு முதன்மையாக இருக்க வேண்டும் பொருளாதார அபிவிருத்தியில் பெண்கள் முன்னோடியாக மாற வேண்டும். மகளிர் உரிமைகளுக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.
தேர்தல் காலப்பிரவில் பெண்களுக்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என பேசப்பட்டாலும், இன்னும் பெண்களுக்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவில்லை. இதற்கென தனியான ஜனாதிபதி செயலணி நிறுவப்படும் என்று பேசப்பட்டாலும் அவ்வாறான விடயம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது தெரியாமல் உள்ளது.
அத்துடன் பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச மற்றும் தேசிய இணக்கப்பாடுகள் இருந்தாலும்,
அவைகள் நடக்கின்றனவா என்பதில் பிரச்சினை இருக்கிறது. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகள் நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகு, அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தரப்பினருடன் ஒன்றாக உட்கார வேண்டியுள்ளனர்.இந்த முறைமையை மாற்றி, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நாட்டின் வங்குரோத்து நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக உரிமைகள் மீறப்பட்டுள்ளன. தேர்தலின் போது இது குறித்து பேசினாலும்,இது உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சிக்கலாகவே உள்ளது.
மேலும் தாய் சேய் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்தும் தேசிய போசணைக் கொள்கை நாட்டுக்கு அவசியம். கோவிட் மற்றும் வங்குரோத்து நிலைக்குப் பிறகு,தாய் சேய் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து சரியான கணிப்பீடு நடத்தப்படவில்லை. பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து கணிப்பீடு நடத்தப்படவில்லை. இத்தரப்பினர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM