
ஈழத்தின் தலைசிறந்த பாடகரான எஸ்.ஜி.சாந்தன் சுகயீனம் காரணமாக ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இன்று மாத்திரம் பாடகர் சாந்தனுக்கு அடுத்தடுத்து இரண்டு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'அப்பாவின் அனைத்து அசைவுகளும் முடங்கியுள்ளதாகவும் நாடித்துடிப்பு மாத்திரம் இயங்குவதாகவும் வைத்தியர்கள் அப்பாவை காப்பாற்ற முழு முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் பாடகர் சாந்தனின் மகன் கோகுலன் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று அதிகாலை வைத்தியரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தவறான கருத்தின் காரணமாகவே அப்பா இறந்து விட்டார் என கூறியிருந்தேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ' எனவும் பாடகர் சாந்தனின் மகன் கோகுலன் தெரிவித்துள்ளார்.
இந்த மண் எங்களின் சொந்த மண் எனும் பாடலின் மூலம் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த சாந்தன் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயத்தின் புகழ்கூறும் "பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் கொக்கட்டிச்சோலையிலே உருவானார்" மற்றும் அம்பிளாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் புகழ் கூறும் தோரணம் இசைப்பேழையில் உள்ள மூன்று பாடல்கள் என பல பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM