சங்கானைப் பிரதேச செயலகத்திலே அராலி தொடக்கம் பொன்னாலை வரை ஏறக்குறை 10 கிலோமீற்றர். அங்கு என்ன நடக்கின்றது என்றால், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் 'வன ஜீவராசிகள்' என்பதை விட்டுவிட்டு 'வன வளங்கள் பாதுகாப்பு' என அந்த இடங்களுக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றி, அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பார்க்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஏறக்குறைய 354 ஏக்கர். 07 மயானங்கள், விளையாட்டுத் திடல்கள், தனியார் காணிகள் எல்லாமே அதற்குள் அடங்குகின்றது. இதுபற்றி அரச அதிபர் சங்கானை பிரதேச செயலாளரைக் கேட்டிருக்கின்றார். பொதுமக்களையும் பொது அமைப்புக்களையும் அழைத்து இது சம்பந்தமான அவர்களுடைய அபிப்பிராயங்களை எடுக்கும்படி, அங்கு சென்ற எல்லோருமே அதை செய்யக்கூடாது என்றே சொல்லியிருக்கின்றார்கள்.
ஏனென்றால், பின்பு அப்பகுதி கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள் அங்கு செல்ல முடியாமல் போகும். அந்த மயானங்களை பாவிக்க முடியாமல் போகும். காரணம், வன வளங்கள் பாதுகாப்பு என்று அவர்கள் மீனவர்களை விட மாட்டார்கள்.
இது மாத்திரமல்ல, ஜனாதிபதி அவர்கள் சொல்லியிருக்கிறார், அமைச்சர் அவர்கள் சொன்னார்கள், 85ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைமைக்குத் தான் கொண்டுசெல்லப் போகின்றோம் என்று. ஆனாலும் அங்கு இந்த விடயம் நடந்துகொண்டிருக்கிறது. அவற்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு வலயமாக எடுப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
நிச்சயமாக இவை எல்லாம் நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால், தமிழ் மக்களை பொறுத்தமட்டில் நம்பிக்கையை உருவாக்க வேண்டியது உங்களுடைய கடமை. எனவே, அதை கட்டாயமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM