இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களில் மிக முக்கியமானது புற்றுநோய் ஆகும். இருப்பினும் புற்றுநோய் என்றாலே மரணம் என்று நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. மருத்துவத்தின் வளர்ச்சியால் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம்.
இந்நிலையில், பல்வேறு நோய்களுக்கு அரும் மருந்தாக காணப்படும் தேன் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார். தேன் கூட்டை கட்டுவதற்கு தேனீக்கள் ஒரு விதமான பிசினை பயன்படுத்துவதாகவும் இந்த பிசின் தேனீயின் கொடுக்கில் உள்ள விஷம் என்றும், அது ஆபத்து இல்லாதது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிக்கு தேன் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், புற்றுநோயின் தாக்கம் எலிக்கு குறைந்துள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து புற்றுநோயை தேன் குணப்படுத்தும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற பழமொழிக்கு ஏற்ப நம்பப்படும் மற்றொரு வாசகம் ‘தேனை விட சிறந்த மாமருந்து இவ்வுலகில் உண்டோ’ என்பதுதான்.
தேன் என்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களுள் ஒன்று. பழங்காலத்தில் இருந்தே தேன் நம்முடைய உணவு முறைகளில் கலந்து உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. அந்த வகையில், இன்று தேன் சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- K.R. கோபி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM