நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்த எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கை என்ன ? - சபாநாயகரிடம் பிரதமர் கேள்வி

01 Dec, 2023 | 07:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் 27/ 2 ல் கேள்விகளை எழுப்பும்போது நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அது தொடர்பில் சபாநாயகர் உரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01) எதிர்க்கட்சித் தலைவர் 27/2ல் கேள்விகளை எழுப்பிய போது குறித்த கேள்விக்கு மேலதிகமாக மேலும் கேள்விகளை எழுப்பினார்.

அதன் போது அவர் எழுப்பிய எந்த கேள்விக்கு பதில் கூற வேண்டும்? என பதில் கூறுவதற்காக தயாராகவிருந்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர சபாநாயகரிடம் வினவினார்.

அதன் போது சபையில் ஏற்பட்ட சர்ச்சையின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

அதன் போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில், 27/2 இன் கீழ் கேள்விகளை எழுப்பும் போது அதற்கு மேலதிகமான கேள்வியையும் எழுப்ப முடியுமா?  அது தொடர்பில் உத்தரவொன்றை சபாநாயகர் பிறப்பிக்க வேண்டும், நாளை முதல் அது நடைமுறைக்கு வர வேண்டும்.

சபாநாயகருக்கோ அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கோ தேவையான விதத்தில் நிலையியற் கட்டளையை துஸ்பிரயோகம் செய்ய முடியுமானாலும் ஆளும் கட்சி அவ்வாறு செயற்படாது. 

பாராளுமன்றத்திலிருந்து விலகிச் செல்லும் தினத்திலும் குறித்த நிலையியற் கட்டளை எதிர்காலத்திற்காக பாதுகாத்து  வழங்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தில் மக்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்த எதிர்க்கட்சித்...

2025-01-16 13:51:26
news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54