உலகளவில் தற்போது பேசுப்பொருளாகியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எம்.ஜி.ஆரின் உருவத்தை உருவாக்கி “கண் போன போக்கிலே கால் போகலாமா” என்ற பாடலை அவர் பாடுவது போன்று செய்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தற்பொழுது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது போன்ற ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் சில சுவையான நல்ல விஷயங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில், 'ஜெயிலர்' பட காவாலாவுக்கு சிம்ரனை ஆட வைத்தது, 'ஜெயிலர்' படத்தின் பாடல் ஒன்றில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி. குரலைப் பயன்படுத்தியது, சிவராஜ்குமார் நடித்த கோஸ்ட் படத்தில் புனித் ராஜ்குமாரை கொண்டு வந்தது என பல இருக்கிறது.
தற்போது AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த எம்.ஜி.ஆரை மீண்டும் ரசிகர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். ''கண் போன போக்கிலே கால் போகலாமா'' என்ற பாடலை அவர் பாடுவது போன்று செய்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடீயோவிற்கு ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களையும், அவர்களின் மகிழ்ச்சிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM