உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் : வெரிட்டே ரிசர்ச் ஆய்வில் தகவல்

Published By: Vishnu

30 Nov, 2023 | 04:30 PM
image

  • பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர் அல்லது தங்களுக்கு இதுதொடர்பில் எந்தவித கருத்தும் இல்லை என்று கூறுகிறார்கள்.

அக்டோபர் மாதம் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பினால் (Syndicated Surveys) நடத்திய கணக்கெடுப்பின் படி, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சனத் தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் - அதாவது 53% - நம்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாட்டில் நிலவும் பின்வரும் மூன்று கருத்துக்கள் கணக்கெடுப்பில் பங்குபற்றியவர்கள் இடையே கேட்கப்பட்டன, தங்களால் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தை தேர்ந்தெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது. 

இது உள்ளூர் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. 

உள்ளூர் அரசியல் சக்திகள் மற்றும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது. 

 53% உள்ளூர் அரசியல் சக்திகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்புகின்றனர் - 30% இரண்டாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர், 23% மக்கள் மூன்றாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர். உள்ளூர் அரசியல் சக்திகளின் தலையீடு இல்லாமல் இது மேற்கொள்ளப்பட்டதாக 8% பேர் மட்டுமே நம்புகின்றனர் (முதல் பதில்). 39% சதவீதம் பேர் தங்களுக்கு இது தொடர்பாக எந்தவித கருத்தும் இல்லை என்றும் அல்லது கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர்.

2019 ஏப்ரல் 21, (உயிர்த்த ஞாயிறு) அன்று மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளில் மொத்தமாக 269 நபர்கள் கொல்லப்பட்டனர்.

கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்

நாடளாவிய ரீதியில் தேசியளவில் வயது வந்த இலங்கையர்கள் 1,029 பேர் கொண்ட பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு 2023 அக்டோபரில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 95% நம்பக இடைவெளி மற்றும் ± 3% வழு எல்லையை உறுதிசெய்யும் வகையில் இதன் மாதிரி மற்றும் வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

வெரிட்டே ரிசர்ச் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு (Syndicated Surveys) கருவியின் ஒரு அங்கமாக இக்கருத்துக்கணிப்பு வாக்களிப்பு பங்காளியான வன்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடட்டினால் நடத்தப்பட்டது. சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு கருவியானது இலங்கை மக்களின் உணர்வுகளை அளவிடுவதற்கான வாய்ப்பை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொரணையில் வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும்...

2025-02-13 20:11:52
news-image

அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து...

2025-02-13 19:21:19
news-image

ஜனாதிபதி தலைமையில் 2025 வரவு செலவுத்திட்ட...

2025-02-13 19:17:48
news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52