பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக முன்னாள் கடற்படை தளபதி வசந்தகராணகொடவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆதரவளிக்கின்றது - கொழும்பில் கடத்தப்பட்ட 11 இளைஞர்களின் பெற்றோர்

Published By: Rajeeban

30 Nov, 2023 | 10:44 AM
image

கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 இளைஞர்களின் பெற்றோர் நேற்று தங்கள் பிள்ளைகளிற்கு நீதிகோரி கொழும்பு உயர்நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தாய்ஒருவர் கருத்து தெரிவிக்கையில் உயர்நீதிமன்றத்தில் டிரையல் அட்பார் விசாரணை இடம்பெறும்போது தங்களிற்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து சட்டமாஅதிபர் திணைக்களத்தின் அக்கறையின்மை காரணமாக நீதி 15 வருடங்களாக தாமதமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் கடற்படை தளபதி வசந்தகராணகொடவிற்கு ஆதரவளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் சட்டமாஅதிபர் திணைக்களம் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டுகாணாமலாக்கப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது என தெரிவித்துள்ள காணாமலாக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயார் எனினும் கரணாகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் பிள்ளைகளை யார் கடத்தினார்கள் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறித்த விபரங்கள் கூட எங்களிடம் உள்ளன  என குறிப்பிட்டுள்ள அவர்  அரசாங்கமும் சட்டமா அதிபர் திணைக்களமும் எங்களிற்கு நீதிவழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேவிசம்பத் என அழைக்கப்படும் கடற்படை வீரரினால் கப்பத்திற்காக 11 இளைஞர்களும் கடத்தப்பட்டனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2008 - 2009 இவர்கள் கொழும்புர் திருகோணமலை கடற்படை முகாமில் வைக்கப்பட்டிருந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 இளைஞர்களில் ஐவர் 2008 செப்டம்பர் 17 ம் திகதி கடற்படையினரால் கடத்தப்பட்டனர் - கருப்பு டாட்டா இன்டிகோ வாகனத்தையும் கடற்படையினர் கொண்டுசென்றனர்.

இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் ராஜீவ்நாகநாதன் பிரதீப் விஸ்வநாதன் முகமட் சஜித்  திலகேஸ்வரம் ராமலிங்கம் ஜமால்தீன் திலான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காணாமல்போன ஏனையவர்கள் கஸ்தூரியராச்சிகே ஜோன்ரீட் அமலன் லியோன்  ரொசன் லியோன் அன்டனி கஸ்தூரியாராச்சி கனகராஜா ஜெகநாதன்.

இத்துடன் தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் முகமட் அலி அன்வரும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16
news-image

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 139 பேருக்கு...

2025-02-12 18:24:06
news-image

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவராக முன்னாள்...

2025-02-12 18:13:43
news-image

தையிட்டி விகாரை விடயத்தில் சட்ட ஆட்சி...

2025-02-12 17:19:27
news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

எதிர்பார்ப்பின் மேடை நிகழ்வு “டவர் நாடக...

2025-02-12 18:12:00
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58