மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Published By: Digital Desk 3

30 Nov, 2023 | 09:52 AM
image

மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில்  நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (15வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (28) மாலை சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கடலில் நீராடச் சென்றுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

புதன்கிழமை (29) மாலை 7.00 மணியளவில் சடலம் ஒன்று களுவன்கேணி கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்ததுடன், சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் சடலம் சிறுவனுடையது என அடையாளப்படுத்தப்பட்டது.

திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான...

2025-05-24 13:29:53
news-image

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2025-05-24 13:40:20
news-image

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் :...

2025-05-24 13:05:32
news-image

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2025-05-24 12:34:24
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய...

2025-05-24 12:51:36
news-image

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம்...

2025-05-24 12:39:26
news-image

அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக...

2025-05-24 12:56:26
news-image

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த...

2025-05-24 11:48:00
news-image

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத...

2025-05-24 12:12:21
news-image

சிறைச்சாலையில் தகராறு ; “புரு முனா”வும்...

2025-05-24 11:08:10
news-image

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில்...

2025-05-24 11:57:55
news-image

ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பலி...

2025-05-24 11:41:15