மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகன் லதுஷன் (15வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (28) மாலை சிறுவன் உள்ளிட்ட 5 பேர் கடலில் நீராடச் சென்றுள்ளனர். இந்நிலையிலேயே குறித்த சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
புதன்கிழமை (29) மாலை 7.00 மணியளவில் சடலம் ஒன்று களுவன்கேணி கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் கரைக்கு எடுத்து வந்ததுடன், சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் சடலம் சிறுவனுடையது என அடையாளப்படுத்தப்பட்டது.
திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM