"மலி" யானை மரணம் ; இலங்கையிடம் புதிய யானையை கோரும் பிலிப்பைன்ஸ்

Published By: Digital Desk 3

29 Nov, 2023 | 05:06 PM
image

உலகின் மிகவும் "சோகமான" யானை என பெயரிடப்பட்ட இலங்கை  யானை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள மிருக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ளது. குறித்த யானை மணிலா மிருக்காட்சாலையில் இருந்த ஒரே ஒரு யானை என்பதால் தனது வாழ்நாளை தனிமையில் வாழ்ந்துள்ளது.

விஸ்வ மலி என பெரியடப்பட்ட குறித்த யானை பிறந்து 11 மாதங்களில்  1977 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸின் முதல் பெண்மணி இமெல்டா மார்கோஸுக்கு இலங்கை அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு மே மாதம் யானை மணிலா நகரத்தின் பராமரிப்பின் கீழ் வந்தது. இதேவளை, 1977 ஆம் ஆண்டு ஷிவா என்ற மற்றொரு யானையும் மிருக்காட்சாலையில் இருந்தது. அந்த யானை 1990 ஆம் ஆண்டு உயிரிழந்தது.

அன்றிலிருந்து மலி மிருகக்காட்சிசாலையில் இருந்த  ஒரே யானையாக தனிமையில் வாழ்ந்து வந்தது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் மணிலா மிருக்காட்சிசாலை குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் இடமாக செயல்பட்டது. அச்சமயம் மலி யானை குழந்தைகளை மகிழ்வித்தது.

இந்நிலையில், செவ்வாயன்று மலியின் மரணம் குறித்து மணிலா மேயர் ஹனி லகுனாவால் பேஸ்புக்கில் அறிவித்தார். அவர் மலியைப் பார்க்க மிருகக்காட்சிசாலைக்குச் சென்றது அவரது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.

யானையை பிரேத பரிசோதனையில் சில உறுப்புகள் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தும், பெருநாடியில் அடைப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், பிலிப்பைன்ஸிற்கான ஒரு விஜயத்தின் போது நாட்டிற்கு மலியை கொண்டுவந்த அதே இலங்கை அரசாங்கமே புதிய யானையை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக மணிலா மேயர் ஹனி லகுனா பிலிப்பினோவில் புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில்  தெரிவித்தார்.

இதேவேளை, யானையின் எச்சங்களை பாதுகாத்து அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட பிலிப்பைன்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36