இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 2.20 கோடி ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் பறிமுதல் - நால்வர் தப்பியோட்டம்

Published By: Vishnu

29 Nov, 2023 | 04:17 PM
image

இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி ரூபா மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து ரோந்து பணியில்  ஈடுபட்டனர்.

இதன் போது புதன்கிழமை (29)  அதிகாலை 4 மணியளவில்  ஒரு நாட்டுப் படகு சந்தேகத்திற்கிடமாக இந்தியா பாம்பன் அருகே நின்றது.

அதனையடுத்து படத்திலிருந்து நான்கு பேரும் கரையை நோக்கி வரும் போது மறைந்து இருந்த அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்ற போது தாங்கள் கொண்டு வந்த பொதியை படகில் விட்டு  கடலில் குதித்து தப்பினார்.

பின்னர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகை  சோதனை செய்தபோது அதில் சுமார் 3.5 கிலோ கடத்தல் தங்க கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து  கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப் படகை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் கொண்டு சென்று சோதனை செய்தனர்.

மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து சுங்கத்துறை மற்றும் பொலிஸாரிடம் தகவல் கொடுத்து அவர்களை தீவிரமாக தேடி வருவதோடு, தொடர்ந்து தப்பியோடியவர்கள் மற்றும் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி 20 இலட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

மேலும் மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்த  படகை  மண்டபம் சுங்கத் துறை  அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதிகாலையில் பாம்பன் அருகே கடத்தல்  தங்கம் பறிமுதல்  செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகைகள் குறித்து...

2025-01-24 16:54:16
news-image

பொரளை ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையை தேசிய...

2025-01-24 18:29:40
news-image

இலங்கை அரசாங்கம் காற்றாலை மின் உற்பத்தி...

2025-01-24 17:29:17
news-image

மோட்டார் சைக்கிள்களில் போதைப்பொருள் விற்பனை ;...

2025-01-24 17:01:16
news-image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின்...

2025-01-24 17:08:17
news-image

மஹரகம ரயில் நிலையத்திற்கு அருகில் ஹெரோயினுடன்...

2025-01-24 16:26:51
news-image

பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது - அடிப்படை உரிமை...

2025-01-24 16:17:44
news-image

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு...

2025-01-24 16:20:00
news-image

“சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான்....

2025-01-24 15:58:31
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதி ;...

2025-01-24 15:20:43
news-image

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அதிகூடிய...

2025-01-24 15:28:45
news-image

வவுனியாவில் 128 கிலோ மாட்டிறைச்சியுடன் வாகனம்...

2025-01-24 15:15:39