கொழும்பு - பேலியகொடை பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரு குழுக்களின் பெண்கள் உட்பட 11 சந்தேக நபர்கள் கூரிய வாளுடன் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களனி பிரதேசத்தை சேர்ந்த 26, 46 , மற்றும் 47 வயதுடைய 3 பெண்களும் 23 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 8 ஆண்களும் ஆவர்.
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 4 கூரிய வாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரு குழுக்களில் உள்ள 7 பேர் பல்வேறு குற்றங்களில் பொலிஸாரால் தேடப்பட்டு வருவதாகவும் சிலர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்குழு அடிக்கடி இவ்வாறு போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கலவரத்தில் ஈடுபடுவதாகவும் இவர்கள் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் கீழ் செயற்படுபவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM