விடுதலைப் புலி கள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கி ரவைகளை தனது பலமாக கொண்டிருந்தார். ஆனால் நான் வாக்குச்சீட்டுக்களை மாத்திரமே பலமாகக்கொண்டு அரசியல் செய்கின்றேன் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் பொருட்டான செயற்பாடுகளின் போது நான் ஒரு தனித்துவமான பிரதிநிதியாகவே செயற்படுவேன். மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்கட்சி தலைவர் சம்பந்தனின் கீழ் செயற்படப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொட்டஞ்சேனை இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்காக அப்பியாச புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பிலும் கொழும்பில் பல உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் இன்று எமக்கு இங்கு கிடைக்கப்பெற்றுள்ள குறைந்தபட்ச பலமாகும். பலமில்லாவிட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது வாய்பேச்சுக்கள் மாத்திரமே எமக்கு கிடைக்கும்.
அதனால் சகலதுக்கும் அடிப்படையாக அரசி்யல் பலமே அமைகிறது. அரசியல் பலம் எவ்வாறு வருகின்றது என பார்க்கின்ற போது தமீழீழ விடுதலை புலிகள் இருந்த காலத்தில் துப்பாகி ரவைகளில் பிரபாகரனின் பலம் இருந்தது. ஆனால் எனது பலம் வாக்குசீட்டாகும் வாக்குசீட்டை இங்குள்ளவர்கள் முறையாக பயன்டுத்தினால் எமக்கான பலம் கிடைக்கும்.
கடந்த காலங்களில் நீங்கள் வாக்குகளை முறையாக பயன்படுத்தவில்லை. அறிவுள்ளவர்கள் உணர்வுள்ளவர்கள்இ சமூக அக்கறை உள்ளவர்கள்இ உள்ளூராட்சி மன்ற தேர்தல்களிலும் பாராளுமன்ற தேர்தல்களிலும் தமது வாக்குகளை சரியாகப் பயன்படுத்தியமைனால் தான் நாம் இந்த அளவிற்கேனும் பலமாக இருக்கின்றோம்.
தேர்தல் வருகின்ற போது கண்களை மூடிக்கொண்டேனும் வாக்குளை சரியாக அளிக்க வேண்டும். காரணம் நமக்கு நாமே வாக்களிக்க வேண்டும். தற்போது இவ்விடத்தில் உள்ளவர்கள் கூட தேர்தல் காலத்தில் நீங்கள் எமக்காக என்ன செய்தீர்கள் என்றுதான் கேட்பார்கள். அவர்களிடத்தில் வாக்களிக்காதீர்கள் என்று கூறிவந்திருக்கிறேன்.
கொலன்னாவை பகுதியில் தமிழ் நாடு என்று ஒரு இடமுள்ளது. அங்கு தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். ஒரு காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மக்களின் வீடுகளை தகர்க்க ரகசியமாக நீதிமன்ற அனுமதியினை பெற்றுக்கொண்டு வந்தனர். அங்குள்ள முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றிணை உடைத்தன் பின்னரே எனக்கு தகவல் கிடைத்தது. அங்கு நான் சென்று பார்தத போது பொலிஸார் யுத்தம் செய்வது போன்று குவிந்து நின்றார்கள்.
அக்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்றால் ஆயுதத்துடனேயே பொலிஸார் வருவார்கள். எவ்வாறாயினும் நான் அவ்விடத்தினை உடைக்கவிடவில்லை. நீதி மன்ற ஆணையைக்காட்டி உடைக்க முற்பட்டனர் சகல செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டன.
ஆனாலும் நீதிமன்றத்தின் ஆணையைக் காரணம் காண்பித்து இரண்டரை வருடங்கள் எனமீதான வழக்கு இடம்பெற்றது. ஆரம்ப காலத்தில் வழக்கு இடம்பெற்ற போது என்னை கடவுளென்றும் தலைவரெண்டும் நீதிமன்றம் வரையில் வந்து பாரட்டி வாழ்க என்ற கோசம் எழுப்பியவர்கள் இன்று வருவதில்லை.
எல்லோரும் மறந்துவிட்டனர். ஆனால் வழக்கில் எனக்கு எதிராக தீர்பளிக்கப்பட்டிருந்தால் நான் சிறைக்குச் சென்றிருப்பேன். அதற்கு பின்பு கொலன்னாவ சென்று வாக்கு கேட்கையில் கடந்த வாரம் ஹிருணிகா இ சுமதிபால ஆகியோர் வந்திருந்தார்கள். அவர்கள் வீட்டு கூரைகளுக்கான தகடுகளை தந்தார்கள் நீங்கள் என்ன தந்தீர்கள் என கேட்கின்றார்கள்.
தகடுகளை பொருத்துவதற்கான வீடுகளையே நான் தான் காப்பாற்றிக் கொடுத்தேன் என்பதை மறந்துவிட்டு பேசுகின்றார்கள். அதனால் வாக்கு வேண்டாம் என்றே கூறிவிட்டு திரும்பிவிட்டேன். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் கொழும்பில் நடமாட முடியாதிருந்த போதும் கூட கூட்டணி மற்றும் கூட்டமைப்பு உட்பட சகலரும் ஒடி ஒழிந்துக்கொண்டார்கள்.
ஆனால் அந்த நேரத்திலும் நாம் எவரும் இல்லாத நெருக்கடியான சந்தர்ப்பதிலும் இருந்துள்ளோம். இன்று முகப்புத்தகத்திலும் அரசர் குல பரம்பரைகள் போன்று இன்று வீரம் பேச பலர் இருக்கின்றார்கள். பிரச்சினை என்கின்ற போது மனோ கணேசன் மாத்திரமே வருகிறேன்.
அதேபோல் நான் தற்போது ஐக்கிய தேசிய கட்சியி்ல் இணைந்திருப்பதால் நான் ஐக்கிய தேசிய கட்சியியை சேர்ந்தவன் என்று கருதிவிடக்கூடாது. எங்கு சேர்ந்தாலும் நாம் தனித்துவமாகவே இருக்கின்றோம். அதனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும் எனக்கு தலைவர் இல்லை எனக்கு நானே தலைவன்.
மலையகத்திலும் வடக்கு கிழக்கிலும் கொழும்பிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் பற்றி எனக்கும் நன்றாக தெரியும். மூன்று மாத்திற்கு முன்பாக ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து வந்த சிறுபான்மையினர் விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதியிடத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிவுறுத்தியிருந்தோம்.
தற்போது இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் அதற்கான பலன் தெரிகின்றது. இவ்வாறு எமது பிரச்சினை சர்வதேசம் அறிந்துக்கொள்கின்றது. ஆனால் அதற்கு முன்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியில் தமிழ் மக்களே இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருந்துள்ளார்.
இன்று அவர் எமது பிரச்சினையை உலக அரங்கில் அரங்கேற்றியுள்ளமையில் அது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாக அமைகின்றது அது மனோ கணேசனின் வெற்றியுமாகும்.
தமிழ் மொழியுரிமை பிரச்சினைக்கு தீர்வு
எனது அமைச்சுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நண்பர் ஒருவர் முறைப்பாடொன்றினை பதிவு செய்ய முற்பட்ட போது அங்கு தமிழ் மொழியில் முறைப்பாட்டினை ஏற்பதற்கான எவரும் இருக்கவில்லை என்று அந்த பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளார்.
பத்திரிகைகளும் அதுகுறித்து பேசுகின்றன. ஆனால் எனக்கு மூன்று மொழிகளும் நன்கு தெரியும். அதனால் இன்று மொழியுரிமை குறித்த கருத்ததாடல்களை ஏற்படுத்தியுள்ளேன். ஆனால் அரசாங்கத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவே வெளிநாட்டு உதவிகளை நாம் கோரியுள்ளோம் ஜூன் மாத்திலே தான் அந்த பணம் எமக்கு கிடைக்கும்.
அதன் பின்னர் சகல புதிய மொழியுரிமைக்கான திட்டங்களும் அமுலுக்கு வரும் எனவே தற்போது எமக்குள்ள நிதித்தேவையை விமர்சிக்கின்றவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்இ உங்களால் முடிந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் எனது அமைச்சுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்து தரச்சொல்லி செய்திகளை வெளிப்படுத்துங்கள்.
அதனை விடுத்து தமிழ் அமைச்சர் கிடைத்துவிட்டதை வாய்பாக பயன்படுத்தி கடுமையாக விமர்சிக்காதீர்கள் கோத்தபயவை பார்த்துவிட்ட நான் எவருக்கும் அஞ்சப்போவதில்லை. அதனால் உங்களுக்கும் முதுகெலும்பிருந்தால் ஜனாதிபதிக்கு எனது அமைச்சுக்கு பணம் தர கூறுங்கள் அரசாங்கத்தில் இடம்பெறும் கொள்ளையடிப்புகளை தவிர்த்தாவது எனது அமைச்சுக்கான நிதியை பெற்றுத்தர கூறுங்கள். எவ்வாறிருப்பினம் வெகு விரைவில் மொழியுரிமை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM