இந்தியாவில் உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியில் ஈடுப்பட்ட அர்னால்ட் டிக்ஸ் யார்?

Published By: Digital Desk 3

29 Nov, 2023 | 11:40 AM
image

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் செவ்வாய்க்கிழமை (28) மீட்கப்பட்டனர். இந்த அபார மீட்புப் பணியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர். 

அதில் ஒருவர்தான் சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்ட் டிக்ஸ்,

பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராவார். கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். 

மேலும், நிலத்தடி கட்டுமானங்கள் தொடர்பான அபாயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கி வரும் டிக்ஸ், உலகின் முன்னணி நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணராக அறியப்படுகிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், புவியியல், இடர் மேலாண்மை ஆகிய துறைகளில் டிக்ஸ் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்டர்கிரவுண்ட் ஒர்க்ஸ் சேம்பர்ஸ் அமைப்பின் உறுப்பினராகவும் டிக்ஸ் இருந்து வருகிறார். இந்த அமைப்பு நிலத்தடி பணிகள், வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கலான அபாயங்களை கண்டறிந்து தீர்க்கும் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட குழுவாகும்.

சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கு உதவ, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் கடந்த நவம்பர் 20ஆம் திகதி அழைக்கப்பட்டார். நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசிய டிக்ஸ், “ஆரம்பத்தில், இது விரைவாக நடக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, இது எளிதாக இருக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, அது நாளை நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இன்றிரவு என்று கூறவில்லை. அவர்கள் கிறிஸ்துமஸ்க்கு வீட்டில் இருப்பார்கள், பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் சொன்னேன்” என்றார்.

அவர் சொன்னது போலவே,நேற்று செவ்வாய்க்கிழமை  41 தொழிலாளர்களும் எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணியின்போது சுரங்கத்துக்கு வெளியே இருந்த சிறிய கோவிலில் டிக்ஸ் மிகவும் அமைதியான முறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. 

"இந்திய அதிகாரிகளின் அற்புதமான சாதனை. அவுஸ்திரேலிய பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் மீட்பு பணியில் பங்கு வகித்தமைக்கு பெருமைப்படுகிறேன்" என அவுஸ்திரேலிய பிரதமர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்

சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து, இந்தியாவுக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் பிலிப் கிரீன் அர்னால்ட் டிக்ஸை தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே...

2025-01-18 21:14:01
news-image

ஈரானில் நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம்...

2025-01-18 16:35:56
news-image

காசாவில் நாளை முதல் யுத்த நிறுத்தம்

2025-01-18 14:20:26
news-image

ஹமாசுடனான உடன்படிக்கைக்குஇஸ்ரேலின்தேசிய பாதுகாப்பு அமைச்சர் எதிர்ப்பு...

2025-01-18 13:07:10
news-image

டிரம்ப் பதவியேற்ற ஓரிரு மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகளுக்கு...

2025-01-18 11:53:41
news-image

யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் அமைச்சரவையும் அனுமதி

2025-01-18 09:23:19
news-image

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு...

2025-01-17 19:53:13
news-image

இம்ரானிற்கு 14 வருட சிறை -...

2025-01-17 14:30:36
news-image

'அதிசயங்கள் நிகழ்வது வழமை - எனது...

2025-01-17 12:53:44
news-image

அதிகளவு செல்வத்தையும் அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள...

2025-01-17 12:36:51
news-image

பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும் பெரும் துயரத்தை...

2025-01-17 11:14:49
news-image

யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல்...

2025-01-16 15:10:39