எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 30 நாட்களுக்கு மலேசியாவிற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி செல்ல அனுமதி வழக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அறிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் ஒரு உரையின் போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஆனால் வீசா எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும் என்று கூறவில்லை.
மலேசியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பட்டியலில் சீனாவும் இந்தியாவும் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலுக்கு முன்னர் மலேசியாவிற்கு சீனாவிலிருந்து 1.5 மில்லியன் பேரும் இந்தியாவில் இருந்து 354,486 பேரும் சென்றுள்ளனர்.
இதனுடன் ஒப்பிடுகையில், இவ் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையில் சீனாவிலிருந்து 498,540 பேரும் இந்தியாவில் இருந்து 283,885 பேரும் சென்றுள்ளார்கள்.
தாய்லாந்து சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும், மந்தமான பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கும் இலவச விசா முறையை அமுல்படுத்தியுள்ளது. அதில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அடங்குகின்றன. அதனை தொடர்ந்து மலேசியாவும் அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, மலேசியாவுக்கு செல்வதற்கு சீன மற்றும் இந்திய குடிமக்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM