(லியோ நிரோஷ தர்ஷன்)
கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களின் காணிப் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மாகித்துள்ளது.
பாகாப்பு படைகள் வசம் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் , மேற்படி காணி விவகாரம் மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை இடம்பெறலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் பாரர்ளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கேப்பாப்புலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து இன்று 25 ஆவது நாளாகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM