ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏதேச்சதிகாரம் அதிகரிக்கின்றது - சட்டத்தரணிகள் அமைப்பு

Published By: Rajeeban

27 Nov, 2023 | 09:31 AM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏதேச்சதிகாரம் அதிகரித்துவருவது குறித்து சட்டத்தரணிகள் அமைப்பு கரிசனை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் ஆணையின்றி ஆட்சிபுரியும் ஜனாதிபதியின் அதிகரித்துவரும் ஏதேச்சதிகாரம் குறித்து இலங்கையின் சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடி குறித்த தீர்ப்பு உட்பட சமீபத்தைய பல நீதிமன்ற தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி  அரசியல் சாசனத்தால் குறிப்பிடப்பட்டுள்ள மக்கள் ஆணையை இலகுவாக புறக்கணிக்க முடியாது என சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதியின் அதிகரித்துவரும் ஏதேச்சதிகாரம் குறித்தும் அதனால் நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறித்தும்  வர்த்தக சமூகத்தினரும் சர்வதேச நாணயநிதியம் உட்பட சர்வதேச சமூகமும் கருத்தில் கொள்ளவேண்டும் என சட்டத்தரணிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது அரசியல் எழுச்சிக்கு வழிவகுக்கலாம் என தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஜனாதிபதியின் ஏதேச்சதிகாரத்தை நோக்கிய போக்கு தொடர்ந்தால் பொருளாதார ஸ்திரதன்மை பாதிக்கப்படலாம் எனவும்  குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் அரசமைப்பு பேரவையை அச்சுறுத்தும் ஜனாதிபதியின் சமீபத்தைய முயற்சிகளை சட்டத்தரணிகள் அமைப்பு கண்டித்துள்ளது.

நவம்பர் 23 ம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ஒரு ஏதேச்சதிகார நடவடிக்கையாக அரசமைப்பு பேரவையின் நோக்கத்தை திரிபுபடுத்தினார் அரசமைப்பு பேரவை ஜனாதிபதியின் கீழ் வருகின்றது என தெரிவித்தார் என சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34