வடக்கு கடற்பரப்பில் வைத்து கேரள கஞ்சா கடத்தலிலீடுபட்ட 5 சந்தேகநபர்களை தாம் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து இன்று 24 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டு வரை 700 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வடக்கு கடற்பரப்பில் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
வடக்கு கடற்பரப்பிலுள்ள காங்கேசன்துறைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 154.6 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளை படகு மூலம் கடத்தவிருந்த நிலையில் கஞ்சாவுடன் 3 பேரை கைதுசெய்தனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மூவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இக் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவரை உடுத்துறை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைதுசெய்தனர்.
குறித்த ரோந்து நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட ஐவரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருட்களையும் படகையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM