தொடரும் மழையுடனான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் 34,396 டெங்கு நோயாளர்கள் பதிவானதுடன் மேல் மாகாணத்திலேயே அதிகமானவர்கள் பதிவாகியுள்ளனர் .
நவம்பர் மாதத்தின் மூன்று வாரங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 63,540 ஆக உயர்ந்துள்ளதுடன், 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
நவம்பர் மாதத்தின் கடைசி 18 நாட்களில் மட்டும் 3,844 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார் .
கொழும்பு மாவட்டத்தில் 15,321 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 14,509 டெங்கு நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்தில் 4,563 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் .
அத்துடன் மத்திய மாகாணத்தில் 12 சதவீத டெங்கு நோயாளர்களும் வடமேற்கு மாகாணத்தில் 8.5 சதவீத டெங்கு நோயாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 8.2 சதவீத டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் . இவ்வாறு டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதற்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் பற்றாக்குறையே காரணமாகும்.
தொடரும் மழையுடனான வானிலை காரணமாக தொற்றுநோயியல் பிரிவினால் அதிக ஆபத்துள்ள 45 டெங்கு பரவும் பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதாக டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது .
கண்டி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நவம்பர் மாத இறுதியிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் டிசம்பர் மாத நடுப்பகுதியிலும் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM