99.9 சத­வீ­த­மான படை­யினர் ஒழுக்­க­மா­க­வே யுத்தம் செய்­தனர்

Published By: Raam

24 Feb, 2017 | 11:06 AM
image

யுத்­த ­கா­லத்தின் போது 99.9 சத­வீ­த­மான படை­யினர் மிகவும் நேர்­மை­யா­கவும் ஒழுக்­க­மா­க­வுமே யுத்தம் செய்­தனர். எமது படை­யினர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களில் ஈடு­ப­ட­வில்லை. எனினும் ஒரு சத­வீ­தத்­தினர் குற் றம் செய்­தி­ருக்­கலாம். அவ்­வா­ற­ான­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரி­விக்­கப் ­போ­வ­தில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

அத்­துடன் மாகாண சபை­களைச் சேர்ந்த தமிழ் பிர­தி­நி­திகள் தெற்கு சிங்­க­ள­வர்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் செயற்­ப­டு­கின்­றனர். இதனால் நல்­லி­ணக்கப் பய­ண த்தை முன்­னெ­டுத்துச் செல்­வது கடி­ன­மா கும். எனினும் தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி னர்கள். நேர்­மை­யாக செயற்­ப­டு­கின்­றனர் என்றும் அவர் சுட்­டிக் ­காட்­டினார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இலங்கை பொறி­யியல் பேரவை சட்­ட­மூலம் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் இரா­ணுவ வீரர்கள் யுத்­தத்தை வெற்­றி ­கொண்­ட­மைக்­காக அவர்கள் செய் யும் தவ­று­க­ளுக்­காக அவர்­களை கைது செய்­யாமல் இருக்க முடி­யாது. குற்றம் இழைத்­தி­ருந்தால் பார­பட்சம் பார்க்­காமல் தண்­டிக்­கப்­பட வேண்டும். இப்­படி செயற்­பட்டால் தான் நாடு என்ற வகையில் எம்மால் முன்­னேற்றம் அடைய முடியும்.

ஊட­க­வி­ய­லாளர் கொலை சம்­பந்­தப்­பட்­ட­ மைக்­காக இரா­ணுவ வீரர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்கள் குற்றம் இழைத்­தி­ருந்தால் தண்­டிக்­கப்­பட வேண்டும். எனி னும் தப்பு செய்­யா­ விட்டால் அது தொடர் பில் நாம் மீளாய்வு செய்ய முடியும். அத்­து டன் ஓய்­வூ­திய இரா­ணுவ வீரர்கள் சிறைச்­சா­லையில் இருக்கும் விதம் தொடர்பில் ஜனா­தி­ப­தியின் அவ­தா­னத்­திற்கு கொண்டு வரு வோம். 

இரா­ணுவ வீரர்­களை வேட்­டை­யா­டு­ வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட் டோம். எமது இரா­ணுவ வீரர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களில் ஈடு­ப­ட­வில்லை. யுத்­த­ கா­லத்தின் போது 99.9 சத­வீ­தத்­தினர் மிகவும் நேர்­மை­யா­கவும் ஒழுக்­க­மா­க­வுமே செயற்­பட்­டனர். எனினும் ஒரு சிலர் தப்பு செய்­தி­ருக்­கலாம். ஆகவே தப்பு இழைத்­த­வர்கள் தண்­டிக்க வேண்டும். அதில் எந்­த­வொரு ஆட்­சே­ப­னையும் இல்லை. 

சர்­வ­தேச அளவில் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு இருந்த அச்­சத்தை நாம் அகற்­றி­யுள்ளோம். முன்­னைய காலங்­களில் மார்ச் மாதம் ஐக் ­கிய நாடு­களின் மனித உரிமை கூட்­டத்­தொடர் வரும் போது இரா­ணுவ வீரர்கள் பெரும் அச்­சத்­து­டனே காணப்­பட்­டனர். ஆனால் அந்த சூழலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மாற்­றி­யுள்ளார். 

எனவே தற்­போது நாட்டில் அனைத்து இனத்­த­வர்­க­ளுக்கும் சம உரிமை வழங்­கப்­பட வேண்டும். சம அந்­தஸ்து வழங்­கப்­பட வேண்டும். யுத்­த­த்தினால் மக்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டனர். 

எனினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மை ப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒழுங்கு முறையின் பிர­காரம் இன நல்லிணக் கத்தை ஏற்படுத்தும விதமாக செயற்பட்டாலும் வடக்கு, கிழக்கு மாகாண சபை பிரதிநிதி கள் சிலரினால் தெரிவிக்கப்படும் கருத்து கள் சிங்கள மக்களின் மனங்களை புண்படச் செய்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளி னால் இன நல்லிணக்கத்தினை எதிர்பார்க்க முடியாது போகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22