வடக்கு, கிழக்கில் 6 ஆயிரம் பொலிஸாரை கடமையிலீடுபடுத்த நடவடிக்கை : நீதி அமைச்சர் 

24 Nov, 2023 | 09:36 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கான பயிற்சிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் இடையில் பல்வேறு காரணங்களால் அது சற்று மந்த நிலையிலேயே காணப்பட்டது. என நீதி, அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் சேவையாற்றக்கூடிய 6000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  மொழி பயிற்சிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் மூலம் தமிழ் மொழியில் சேவையாற்ற கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள்களுக்கான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23)  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில்  உரையாற்றிய டளஸ் அழகப்பெரும எம். பி அது தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 டளஸ் அழகப்பெரும எம்.பி  தமது கேள்வியின் போது:

வடக்கு கிழக்கில் தமிழை தமது தாய் மொழியாகக் கொண்ட மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமது தாய் மொழியில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியாமல் பெரும் கஷ்டப்படுகின்றனர்.

தமது தாய் மொழியில் வாக்குமூலங்களை பதிவு செய்து கொள்வதற்கும் முடியாத நிலையே அங்கு காணப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் சில வேளைகளில் இனப் பிரச்சினைக்கான காரணமாகவும் அமைந்து விடுகின்றன. இது அநீதியான ஒரு விடயமாகும்.

மக்கள் தமது தாய் மொழியில் முறைப்பாடுகளை அல்லது வாக்குமூலங்களை வழங்க முடியாத நிலை மிகவும் துரதிஷ்டமானது.

நாட்டில் 85,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் உள்ள நிலையில் அவர்களின் ஒரு வீதமாவது இவ்வாறு தமிழ் மொழியில் செயற்படக்கூடிய உத்தியோகத்தர்கள் கிடையாது. அந்த வகையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் துறையில்  நியமித்துக் கொள்வது தொடர்பான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது அவசியம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிகழ்நிலை தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்...

2025-01-14 19:21:46
news-image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று...

2025-01-15 01:36:26
news-image

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு...

2025-01-14 19:58:50
news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13