இரத்தம் சொட்டச்சொட்ட ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது பிரேசில் பொலிஸார் தடியடி

22 Nov, 2023 | 08:14 PM
image

(ஜே.ஜி.ஸ்டீபன்)

பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டியொன்று பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று பிரேசிலின் மரகானா மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்பதாக பிரேசில் மற்றும் ஆர்ஜன்டீன அணிகளின் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து பிரேசில் பொலிஸார் ஆர்ஜன்டீன ரசிகர்கள் மீது இரத்தம் சொட்டச்சொட்ட கடுமையான தடியடித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் களேபரம் உருவானது.

இதனால் சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி தடைப்பட்டதுடன் பார்வையாளர் அரங்கிலும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அத்துடன் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

பிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரானது 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதிமுதல் ஜூலை மாதம் 19ஆம் திகதிவரை அமெரிக்காவில் இடம்பெறவுள்ளது. இதில் 48 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்நிலையில் போட்டித் தொடருக்கான ஒருபகுதி தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன. இதன் ஒரு போட்டியானது பிரேசிலில் இடம்பெற்றது. இதில் பிரேசில் மற்றும் ஆர்ஜன்ரீன அணிகள் மோதின.

இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக அரங்கில் நிறைந்திருந்த பிரேசில் மற்றும் ஆர்ஜன்ரீன ரசிகர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரேசில் பொலிஸார் ஆர்ஜன்ரீன ரசிகர்கள்மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டனர். தாக்குதலுக்கு இலக்கான ஆர்ஜன்ரீன ரசிகர்களின் தலைகளிலிருந்து இரத்தம் சொட்டச்சொட்ட பிரேசில் பொலிஸார் அவர்களை துரத்தித் துரத்தித் தாக்கினர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்ஜன்ரீன அணியின் கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினஸ் பிரேசில் பொலிஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன் ரசிகர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். எனினும் அந்த கோரிக்கையை பிரேசில் பொலிஸார் உள்வாங்கவில்லை.

இதனையடுத்து ஆர்ஜன்ரீன அணியின் தலைவர் லயோனல் மெஸ்ஸி, இவ்வாறான சூழ்நிலைக்கு மத்தியில் விளையாட முடியாது என்று கூறி தனது அணி வீரர்களை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றார். இதனால் ஆட்டம் சுமார் 25 நிமிடங்கள் தடைப்பட்டது. பின்னர் சுமுக நிலை ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஆட்டம் ஆரம்பமானது.

இதன்போது அர்ஜன்ரீன அணி 1க்கு -0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11