ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு 2820 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு : சிறந்த எடுத்துக்காட்டல்லவென எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

22 Nov, 2023 | 09:24 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

2023 ஆம் ஆண்டை காட்டிலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு 2820 மில்லியன் ரூபாவால் உயர்வடைந்துள்ளது. 

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு அதிக நிதி ஒதுக்குவது சிறந்த எடுத்துக்காட்டல்ல என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற  2024 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமருக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2022,2023 ஆகிய காலப்பகுதிகளில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு  3788 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட நிதி ஒதுக்கீடு  அடுத்த ஆண்டுக்கு 6608 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டை காட்டிலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு 2820 மில்லியன் ரூபாவால் உயர்வடைந்துள்ளது. 

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு அதிக நிதி ஒதுக்குவது சிறந்த எடுத்துக்காட்டல்ல,

1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  இந்தியா பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது இந்தியாவின் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் ,அப்போயை  இந்திய நிதியமைச்சர் மன்மோகன் சிங் ஆகியோர் அரச செலவுகளை குறைத்து பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள். அரச செலவுகளை குறைத்து மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக   செயற்பட்டார்கள். சிறந்த தீர்மானங்களை செயற்படுத்தினதால் தான் இந்தியா பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளில் 95 சதவீதமானவை செயற்படுத்தப்படவில்லை. செயற்படுத்தாத அந்த முன்மொழிவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

2019 ஆம்  ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 40 இலட்சமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 70 சதவீதமானோருக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறவில்லை. பெருந்தோட்ட துறை பகுதியில் ஏழ்மை நிலை 51  சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு  எவ்விதமான தீர்வினையும் இந்த வரவு செலவுத் திட்டம் வழங்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக...

2025-01-26 13:11:13
news-image

மஹியங்கனை - கண்டி வீதியில் லொறி...

2025-01-26 12:12:23
news-image

கனடா பல்கலைக்கழக ஆய்வாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன்...

2025-01-26 12:29:59
news-image

சிலாபத்தில் கார் மோதி பாதசாரி உயிரிழப்பு!

2025-01-26 12:53:46
news-image

யாழ். செல்கிறார் ஜனாதிபதி அநுர

2025-01-26 12:32:28
news-image

வாரியபொல பகுதியில் நீரில் மூழ்கிய இரு...

2025-01-26 11:24:26
news-image

இலங்கை வர ஆய்வுக் கப்பல்களுக்கு தடையில்லை;...

2025-01-26 12:58:44
news-image

வாழைச்சேனையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர்...

2025-01-26 12:41:41
news-image

யோசித்த ராஜபக்ஷவை மகிந்தவின் மகன் என்பதற்காக...

2025-01-26 10:58:29
news-image

காலி இமதுவ பகுதியில் மூன்று பஸ்கள்...

2025-01-26 10:48:42
news-image

பெப்ரவரி 10 எமிரேட்ஸ் செல்கிறார் ஜனாதிபதி

2025-01-26 11:15:14
news-image

கூட்டமொன்றில் பங்கேற்ற இரு தரப்பினருக்கு இடையே...

2025-01-26 12:09:02