சுகாதார அமைச்சின் நான்கு உயர் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல்

Published By: Digital Desk 3

21 Nov, 2023 | 02:53 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்துகள் கொள்வனவுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவின் பணிப்பாளர் உட்பட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர், உதவிபணிப்பாளர்,  கணக்காய்வாளர் மற்றும் கட்டுப்பாட்டாளர்  ஆகியோரே குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

 தரமற்ற 22,500 இம்யுனோகுளோபுலின் மருந்துகளை கொள்வனவு செய்து மருத்துவ விநியோகப் பிரிவுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது. குற்றப்புலனாய்வு பிரிவினர் இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே சந்தேகநபர்கள் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இம்மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகத்தில் இருந்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் விஜித குணசேகர, மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்த நிறுவன உரிமையாளர் சுகத் ஜனக்க பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக  மாளிகாகந்த நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில்...

2023-12-07 19:16:15
news-image

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை...

2023-12-07 19:17:49
news-image

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை...

2023-12-07 17:37:22
news-image

ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியுடன்...

2023-12-07 17:57:20
news-image

முல்லை. கரியல் வயல், சுண்டிக்குளம் பிரதேசவாசிகள்...

2023-12-07 17:44:58
news-image

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை...

2023-12-07 16:44:34
news-image

தலவத்துகொட கிம்புலாவல வீதியோர உணவு கடைகளை...

2023-12-07 16:58:52
news-image

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள்...

2023-12-07 16:51:10
news-image

கொடிகாமம் வீதியில் இளைஞரை தாக்கிவிட்டு, வீடு...

2023-12-07 15:36:45
news-image

பொல்கொட ஆற்றில் குதித்து உயிருக்குப் போராடியவர்...

2023-12-07 15:37:57
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-07 15:10:59
news-image

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் விற்பனை...

2023-12-07 15:14:49