(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
எமக்கெதிராக பொருளாதாரம் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். நிதி தொடர்பான அனைத்து தீரமானங்களும் பாராளுமன்றத்தின் அனுமதியுடனே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் நோக்கங்களுக்காக சேறு பூசுபவர்கள் பின்னர் சேற்றை அப்பிக்கொள்ள நேரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான ஏழாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கெதிராக சபையில் பெரும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. அந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாம் நிராகரிக்கிறோம். ஒவ்வொருவருடைய உரிமையை இல்லாதொழிப்பதற்கு முயற்சிப்பவர்கள் கடந்த காலங்களில் செயல்பட்டமை தொடர்பில் எமக்கு நினைவில் உள்ளது. சேறு பூசல்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. சேறு பூசினால் சேற்றை அப்பிக்கொள்ள வேண்டி வரும் என்பதையே நாம் அவ்வாறானவர்களுக்கு கூற விரும்புகின்றோம்.
எவரது உரிமையை இல்லாதொழிப்பதற்காக பேசுகின்றவர்களுக்கு நாம் தெரிவிப்பது, நாம் வாழ்நாளெல்லாம் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுக்கவும் மக்களை பாதுகாக்கவுமே அர்ப்பணித்துள்ளோம்..
அதனால் உரிமைகளை இல்லாதொழிப்பதற்காக செயல்படுவார்கள் அதனை பாதுகாப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர வேண்டும்.
கடந்த காலங்கள் மறக்கப்பட்டுள்ளன. இரண்டு தசாப்தங்களுக்கு முன் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொண்டே நாம் தீர்மானங்களை எடுத்து வந்துள்ளோம். தன்னிச்சையான விருப்பத்தில் அவ்வாறு செயற்பட எவராலும் முடியாது.
இப்போது அரசியல் நோக்கங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக சிலர் இவ்வாறு பேசுகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் அவ்வாறு இல்லை. அனைவருக்கும் இந்த உயரிய பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உண்டு.
அந்த வகையில் வரவு செலவு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM