கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கி ஸ்சை புனித தோமையார் கல்லூரிக்கும் இடையிலான நீலங்களின் சமர் என அழைக்கப்படும் 138 ஆவது கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான பிரதான அனுசரணையாளராக டயலொக் ஆக்ஷியாட்டா செயற்படுகின்றது.
இதற்கான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இரு கல்லூரிகளின் அதிபர்கள், டயலொக் ஆக்ஷியாட்டா குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, மற்றும் இரு கல்லூரிகளின் ஆசிரியர்கள், வீரர்கள், மணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீண்டகால வரலாற்றைக் கொண்ட 'ரோயல் – தோமியன்' கிரிக்கெட் போட்டி 1880 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் உலக கிரிக்கெட் வரலாற்றில் நீண்டகாலமாக இடை விடாது நடத்தப்பட்டுவரும் பாரம்பரியமிக்க கிரிக்கெட் போட்டிகளில் 2 ஆவது இடத்திலுள்ளது.
இரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1880 ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது நீலங்களின் கிரிக்கெட் போட்டியானது காலிமுகத்திடலில் தற்போது தாஜ் சமுத்திரா ஹோட்டல் அமைந்துள்ள இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்விரு கல்லூரிகளினதும் உத்தியோகபூர்வ வர்ணம் நீல நிறமாகக் காணப்படுவதால் நீலங்களுக்கிடையிலான சமர் என இது வர்ணிக்கப்படுகின்றது.
இவ்விரு அணிகளுக்கிடையில் இதுவரை நடைபெற்றுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ரோயல் கல்லூரி அணி 35 போட்டிகளிலும் புனித தோமையார் கல்லூரி அணி 34 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் இம்முறை நடைபெறும் போட்டி மிகவும் விறுவிறுப்புமிக்க போட்டியாக அமையவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி அதிக போட்டிகளில் வெற்றிவாகை சூடிய அணியாக வலம் வரும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் 136 ஆவது நீலங்களின் சமரில் இருந்து டயலொக் ஆக்ஷியாட்டா அனுசரணை வழங்கி வருகின்றது. இம்முறையும் டயலொக் ஆக்ஷியாட்டா பிரதான அனுசரணையாளராக இருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM