மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெஸ்போட் , கிரிமிட்டி, கார்லிபேக் போன்ற பிரிவுகளில் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் பெய்த கடும் மழையால் நான்காவது முறையாகவும் நானுஓயா டெஸ்போட் பகுதியில் இருந்து செல்லும் கிளையாறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக 4 வீடுகளினுள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதன் காரணமாக வீட்டுப்பொருட்கள், உணவுப்பொருட்கள், ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் பாட நூல்கள், கால்நடைகள் என அனைத்தும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகமானோர் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாக தமது தோட்டங்களில் பயிரிடப்பட்ட மரக்கறி வகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டதால் பாரிய நட்டத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
குறிப்பாக இப்பகுதியில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதாகவும் இவ்வாறான நேரங்களில் தம்மை யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் அரசியல்வாதிகள் வாக்கு வாங்குவதற்கு மட்டுமே தம்மை தேடி வருவதாகவும் இவ்வாறான நேரத்தில் தம்மை யாரும் பார்க்க வருவதில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM