நியூயோர்க்கின் இறைச்சித் தொழிற்சாலை ஒன்றில் இருந்து தப்பியோடிய காளை மாடு ஒன்று, பொலிஸாரின் இரண்டு மணிநேரத் துரத்தலுக்குப் பின் கொன்று பிடிக்கப்பட்டது.
இறைச்சித் தொழிற்சாலையில் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகத் தப்பியோடிய இந்தக் காளை மாடு, நியூயோர்க் நகர வீதிகளில் ஓடியபடியே அங்கிருந்த மக்களைத் தாக்கவும் முயற்சித்தது.
இந்த விடயம் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் உடனடியாக அங்கு வந்த பொலிஸார் காளை மாட்டைப் பிடிக்கத் திணறினர். ஐந்து பொலிஸ் வாகனங்களில் சுமார் பதினைந்து பொலிஸார் வந்த போதும், மாட்டுக்கு அருகில் சென்று அதைத் தொடவும் தயங்கினர். இதனால் மயக்க ஊசி அடங்கிய ஊசிகளை மாட்டின் மீது ஏவினர்.
முதுகில் ஊசிகள் குத்தப்பட்ட நிலையிலும் கூட தனது ஓட்டத்தைக் கைவிடாத அந்தக் காளை, கடைசியில் ஒரு வீட்டின் பின்புறம் சென்று ஒளிந்துகொண்டது. பொலிஸார் அதைக் கண்டுபிடித்துவிட்டாலும், அதைத் தொட யாரும் துணியவில்லை.
கடைசியில், மயக்க மருந்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் அந்தக் காளை உயிரிழந்தது. பின்னர், பொலிஸார் சிலர் சேர்ந்து மாட்டின் உடலை அப்புறப்படுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM