தேரர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்லேகமவில் உள்ள விஹாரை ஒன்றில் பணிபுரியும் தேரர் ஒருவர் கடந்த 16ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேக நபரான தேரரின் சகோதரியுடன் காதல் தொடர்பில் இருந்தமை ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான தேரர் தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM