கிரிக்கெட் தடையை நீக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் - காஞ்சன விஜேசேகர

Published By: Vishnu

18 Nov, 2023 | 01:43 PM
image

(எம்.ஆர்.எம்.. வசீம், இராஜதுரை ஹஷான்)

தற்போதைய நெருக்கடியான நிலையில் கிரிக்கெட்டுக்கான  தடையை நீக்கிக் கொண்டு 19க்கு கீழ் உலகக் கிண்ண போட்டியை நாட்டுக்கு பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் நடவடிக்கையை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். 

மாறாக இதனை அரசியல் ரீதியாக முன்னெடுக்கக் கூடாது என அமைச்சரும் கிரிக்கெட் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் உறுப்பினருமான கஞ்சன விஜேசேகர  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) விஷேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய நிலையில் கிரிக்கெட்டுக்கான தடையை நீக்கிக்கொண்டு 19க்கு கீழ் உலகக்கோப்பை போட்டியை நாட்டுக்கு பெற்றுக் கொள்வதை உறுதி செய்யும் நடவடிக்கையை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து மேற்கொள்வது அவசியமாகும். இதனை அரசியல் ரீதியாக முன்னெடுக்க கூடாது என்பது முக்கியமாகும்.

அத்துடன் இலங்கை கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்பாக ஐசிசி யுடன் கலந்துரையாடுமாறு அமைச்சரவை உப குழுவிற்கு ஜனாதிபதி பொறுப்பை ஒப்படைத்துள்ளார். அதற்கான வேண்டுகோளை நாம் ஐசிசிக்கு விடுத்துள்ளோம். கிரிக்கெட்  விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி நியமித்த அமைச்சரவை உப குழு தொடர்பில் பலருக்கும் தெளிவில்லாமல் உள்ளது.

இந்த குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு என்ன என்பது தொடர்பில் சிலர் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் சம்பந்தமாக பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்காகவே இந்த குழுவை அவர் நியமித்துள்ளார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், கிரிக்கெட் சபை, விளையாட்டுத்துறை, அமைச்சர் விளையாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் ஆகிய தரப்பினரை நாம் சந்தித்துள்ளோம்.

முதலில் முழு பாராளுமன்றமும் இணைந்து விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தடை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமானால் எனக்கு ஜனவரியில் 19ற்கு கீழ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மட்டுமின்றி டிவிசன் 1 கிடைக்காமலும் போகலாம்.

சிலர் நினைக்கலாம் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை. உள்ள சிக்கல்கள் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என. எனினும் அவ்வாறு டிவிஷன் 1 விளையாட சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் எமது விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுபவங்கள் கிடைக்காமல் போகும். அவர்கள் முன்னோக்கிச் செல்வதும் தடைப்பட்டு விடும்.

மகளிர் கிரிக்கெட் வீரர்கள் 19ற்கு கீழ் வீரர்கள்,21ற்கு கீழ் வீரர்கள் ஆகிய அனைவருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். சர்வதேச ரீதியான பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் பாராளுமன்றத்தையோ அரசியலையோ சம்பந்தப்படுத்தக் கூடாது.

எமது நாட்டுக்கு சர்வதேச  ரீதியான பிரச்சினைகள் பெருமளவு உள்ளன.

இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளருக்கு அல்லது ஆசிய கவுன்சிலின் செயலாளருக்கு விரல் நீட்டி பிரயோசனமில்லை. உருவாகியிருப்பது எமது நிர்வாகம் தொடர்பான பிரச்சினையே. அதனை சரி செய்வதற்கு நாம் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து வேறு நாடுகளை குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37