சாரதியை கத்தியால் குத்தி முச்சக்கரவண்டி கடத்தல்

16 Nov, 2023 | 11:38 AM
image

பின்வத்தையில் நேற்று புதன்கிழமை (15) இரவு ஆட்டோவில் பயணித்த மூவர் சாரதியை கத்தியால் குத்தி முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டியில் வாலியதல்பிட்டிய பிரதேசத்திற்கு ஒருவர் வாடகைக்கு செல்வதாக கூறி அதில் பயணித்துள்ள நிலையில் மேலும் இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டியில் ஏறியுள்ளனர்.

பின்னர் இவர்கள் மூவரும் பின்வத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டி சாரதியை  இறங்குமாறு வற்புறுத்திய நிலையில் சந்தேக நபர்களில் ஒருவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாரதியின் வயிற்றிலும் மார்பிலும் குத்தி காயப்படுத்தி விட்டு முச்சக்கரவண்டியை கடத்தி சென்றுள்ளனர்.

காயமடைந்த சாரதி பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது

2025-04-24 12:12:05
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-04-24 11:58:49
news-image

பாடசாலையில் விளையாட்டு பயிற்சியில் பங்கு பற்றாத...

2025-04-24 11:50:43
news-image

‘ஸ்ரீ தலதா வழிபாடு’: கண்டிக்கு வருகை...

2025-04-24 12:00:22
news-image

மன்னாரில் இந்திய அரசின் அபிவிருத்தித் திட்டங்கள்...

2025-04-24 12:01:52
news-image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின்...

2025-04-24 11:33:03
news-image

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-04-24 11:29:31
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை ;...

2025-04-24 10:53:50
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு...

2025-04-24 11:44:09
news-image

இலங்கையர்களுக்கு இந்திய அரசின் ஆயுஷ் புலமைப்பரிசில்

2025-04-24 11:25:58
news-image

உலக வங்கி பிரதிநிதிகளை சந்தித்தார் மேல்...

2025-04-24 11:48:48
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஜஹ்ரான் ஹாசிமே...

2025-04-24 11:01:46