முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில், ஒரு இராணுவ வீரராக தனுஷ் நடித்திருக்கும் புதிய படம் ‘கேப்டன் மில்லர்’.
இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன், சாணி காயிதம், ரொக்கி போன்ற படங்களை இயக்கியும் இறுதிச் சுற்று படத்துக்கான வசனத்தை எழுதியும் கவனம் ஈர்த்திருப்பவர் அருண்.
கேப்டன் மில்லர் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி இந்தப் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், பொங்கல் போட்டியில் இந்தப் படத்தையும் வெளியிட தற்போது முடிவெடுத்திருக்கிறது சத்யஜோதி நிறுவனம்.
டிசம்பர் 15ஆம் திகதியன்று ஷாருக் கானின் ‘டுங்க்கி’யும் பிரபாஸின் ‘சலார்’ திரைப்படமும் வெளியாகிறது. இந்த நிலையில், இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் தனுஷின் கேப்டன் மில்லரையும் கொண்டுவருவதற்கு சத்யஜோதி நிறுவனம் முடிவெடுத்திருந்தது.
எனினும், தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சராம், சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் சுந்தர் .சியின் அரண்மனை 4 போன்ற படங்களுடன் கேப்டன் மில்லர் வெளியானால், இன்னும் அதிக வெற்றியை ருசிக்கலாம் என்று சத்யஜோதி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM