பெரியநீலாவணை முதல் நிந்தவூர் வரையான பகுதிகளில் கடற்கரை மணல் கொள்ளை !

09 Nov, 2023 | 01:00 PM
image

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோதமாக கடற்கரை மண்ணை உரப்பையில் நிரப்பி, மோட்டார் சைக்கிள், மாட்டு வண்டிகளினூடாக கடத்தும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன.

காலநிலை மாற்றம் நிலவும் இந்த சூழ்நிலையில் இரவு வேளைகளில் இனந்தெரியாத சிலர் இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் அதிகளவான கடற்கரை மணலை உரப்பையிலிட்டு எடுத்துச் செல்லும் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

இச்செயற்பாடுகள் பெரியநீலாவணை, பாண்டிருப்பு, மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் பகுதிகளில் பரவலாக இடம்பெற்று வருகின்றன. 

இப்பகுதிகளில் தற்போது இரவு வேளைகளில் ரோந்து சேவைகள் இடம்பெறாத காரணத்தால் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கடத்தல்காரர்கள் சட்ட விரோத மணல் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர். 

குறிப்பாக, கடந்த காலங்களில் பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினரோடு இணைந்து கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமை திணைக்கள உத்தியோகத்தர்களும் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும், அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை முதல் நிந்தவூர் வரையான கடற்கரையோரங்களில் சட்ட விரோதமாக   மண்கடத்தல் இடம்பெற்று வருவதுடன், பாரிய மண்ணரிப்பும் இப்பகுதிகளில் ஏற்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59