மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு பொலிஸாரின் அறிவித்தல்

Published By: Digital Desk 3

09 Nov, 2023 | 12:19 PM
image

மட்டக்களப்பு பிரதேசத்தில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன், திருடர்கள் பகலிலும் இரவிலும் நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, பொது மக்கள் தமது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் சந்தேகத்துக்கு இடமாக நடமாடினால் உடன் பொலிஸாருக்கு அறிவித்து ஒத்துழைக்குமாறு பொதுமக்களை மட்டு தலைமையக பொலிஸார் கோரியுள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுத்து இன்று வியாழக்கிழமை (09) துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அண்மைகாலமாக பகலிலும் இரவிலும் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் நீங்கள் உங்களுடைய உடமைகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது உங்களுடைய பொறுப்பாகும்.

எனவே, பொதுமக்கள் தங்களின் வாகனங்கள், தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

அதேவேளை, தாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வீட்டை நன்றாக பூட்டி திறப்பினை கொண்டு செல்லவும். அதைவிடுத்து திறப்பை பூச்சாடியின் கீழே, கால்துடைப்பான் கீழே வைப்பதை தவிர்ப்பதுடன் சிறுபிள்ளைகளை தனிமைப்படுத்தி வீட்டில் விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும்.

சிறுவர்களுக்கு தெரியாதவர்கள் இனிப்பு பண்டம் வழங்கினால் அதை வாங்கி உண்ணவேண்டாம் என பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதுடன் வீட்டிற்கு அறிமுகம் இல்லாத நபர்கள் வருவதற்கு அனுமதிக்கவேண்டாம்.

அதேவேளை, யாசகம் பெறும் மற்றும்  பொருட்களை விற்பனை செய்வதாக கூறிவரும் நபர்கள் மீது கவனமாக இருக்கவும், வெளியில் வாகனம் நிறுத்த தேவை ஏற்பட்டால் சிசிரி கமரா பொருத்தப்பட்ட இடத்தில் நிறுத்தவும்.

அவ்வாறே வியாபர நிலைய கதவுகளை பாதுகாப்பான முறையில் அமைத்துக் கொள்வதுடன், சிசிரி கமரா பொருத்தப்படல் அவசியம். எனவே, பொதுமக்கள் தமது உடமைகளில் அதிக கவனம் எடுத்து செயற்படுமாறும் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாடினால் உடன் 119 அவசரசேவை அல்லது 0718591130 பொலிஸ் பொறுப்பதிகாரி அல்லது 065 2224422 பொலிஸ் நிலைய இலக்கத்துக்கு அழைத்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு  வழங்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுள்ளதாக அந்த துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06