(எம்.வை.எம்.சியாம்)
களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்றுமுன்தினம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
54 வயதான பெல்பொல, பரகஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
களுத்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக களுத்துறை, எலமோதர ஆற்றில் கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது உயிரிழந்தவர்.
54 வயதுடைய பெல்பொல, பரகஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பதாக குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற மத வழிபாடு நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இளைஞர்கள் இருவர் அவரை தாக்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையில் பணிபுரிந்து அதிலிருந்து விலகிய 24 வயதுடைய இளைஞரும், 18 வயதுடைய மற்றுமொரு இளைஞருமே இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரும் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தாக்குதலுக்கும் அவரின் மரணதுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM