முஸ்லிம் சமூகம் பார்வையாளராக இருக்க முடியாது

Published By: Vishnu

05 Nov, 2023 | 07:02 PM
image

எம்.எஸ்.தீன்

இலங்­கையின் இனப் பிரச்­சி­னைக்கு மூவின மக்­களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அர­சியல் தீர்­வாக அதி­காரப் பர­வ­லாக்­க­லை அமுல்­ப­டுத்­து­வதே சிறந்த வழி­யா­கு­மென்று சர்­வ­தேச நாடுகள் பல உட்பட, உள்­நாட்டில் பல­ராலும் கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன.

அர­சாங்­கமும் காலத்­திற்கு காலம் அதி­காரப் பர­வ­லாக்கல் குறித்து சிறு­பான்மைக் கட்­சி­க­ளுடன் குறிப்­பாக தமிழ்க் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டது. அப்­பேச்­சு­வார்த்­தைகள் ஒரு ஏமாற்று நட­வ­டிக்­கை­யாக இருந்­தாலும், அவை, ஆட்சி அதி­கா­ரத்தில் உள்ள அர­சாங்­கங்கள் அதி­காரப் பர­வ­லாக்கல் மூலம்தான் இனப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண­லா­மென்­பதை ஏற்றுக் கொண்­ட­மைக்­கான அடை­யா­ள­மாகும்.

இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து காலத்­திற்கு காலம் ஆட்­சி­யா­ளர்கள் தமிழ்க் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தாலும், முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு இனப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு குறித்த அக்­க­றை­யு­ட­னான ஈடு­பாட்டைக் காண முடி­ய­வில்லை.

இனப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு முஸ்­லிம்­க­ளுக்கு எவ்­வாறு அமைய வேண்­டு­மென்­ற­தொரு முன்­மொ­ழி­வு­களைக் கூட முஸ்லிம் கட்­சிகள் முன்­வைக்­க­வில்லை. அர­சியல் தீர்வு பற்­றிய பேச்­சு­வார்த்­தை­களில் ஆட்­சி­யா­ளர்கள் முஸ்லிம் கட்­சி­களை இணைத்துக் கொள்­ளா­தி­ருப்­ப­தற்கு இதுவும் ஒரு கார­ண­மாகும்.

அர­சியல் தீர்வு குறித்து முஸ்லிம் மக்கள் மத்­தியில் கருத்­துக்­கள் முன் வைக்கப்பட்டாலும் , ஆவண ரீதி­யாக தமது தீர்வு முன்­யோ­ச­னையை முஸ்லிம் கட்­சிகள் முன் வைக்­க­வில்லை. தங்­க­ளது தீர்வுத் திட்­டத்தை ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­துள்ளோம் என்று ஒரு சில முஸ்லிம் கட்­சி­கள் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. ஆயினும், அவற்றின் உள்­ள­டக்­கத்தை பொது மக்கள் பார்­வைக்கு இன்னும் வெளி­யி­ட­வில்லை.

அர­சியல் தீர்வின் ஒரு நட­வ­டிக்­கை­யாக மாகாண சபை முறைமை கொண்டு வரப்­பட்­டுள்ள போதிலும், மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களைக் கூட முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வில்லை. மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த பல அதி­கா­ரங்­களை மீளப் பெற்றுக் கொள்ளும் செயற்­பா­டு­களே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இத­னி­டையே மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் உள்­ளிட்ட அனைத்­தையும் அமுல் ­ப­டுத்­து­மாறு ஒரு சில தமிழ்க் கட்­சிகள் ஆட்­சி­யா­ளர்­களை வலி­யு­றுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. இன்னும் சில தமிழ்க் கட்­சிகள் மாகாண சபை முறை­மையை ஏற்றுக் கொள்ள முடி­யாது. அதனை விடவும் கூடிய அதி­கா­ரங்­களை தமிழ் மக்­க­ளுக்கு வழங்க வேண்­டு­மென்று கோரிக்­கை­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றன. அத்­தோடு  வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களை இணைக்க வேண்­டு­மென்று பெரும்­பாலும் எல்லா அர­சியல் கட்­சி­களும் கோரிக்­கை­களை முன் வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

இவ்­வாறு தமிழ்க் கட்­சி­களின் நட­வ­டிக்­கைகள் அமைந்­துள்ள நிலையில் முஸ்லிம் கட்­சிகள் வடக்கும், கிழக்கும் இணைய முடி­யாது. அதனை ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. வடக்கும், கிழக்கும் இணை­வதை முஸ்லிம் மக்கள்  ஏற்றுக் கொள்­ள­மாட்­டார்கள் என்ற நாடித்­து­டிப்­புக்கு ஏற்­ற­வாறு கருத்­துக்­களை தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்­களே அல்­லாமல் வடக்கும், கிழக்கும் தனித்­தனி மாகா­ணங்­க­ளாக இருக்­கின்ற இன்­றைய நிலையில் அவற்­றுக்கான  அர­சியல் அதி­கா­ரங்கள் எவ்­வாறு அமைய வேண்­டு­மென்று தெரி­விப்­ப­தில்லை.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆட்­சி­யா­ளர்­களை திருப்­திப்­ப­டுத்த வேண்­டு­மென்­ப­தற்­காக மாகாண முறைமை தேவை­யில்லை.

அதி­காரப் பர­வ­லாக்கல் அவ­சி­ய­மில்லை, மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை வழங்­கு­வது பிரச்­சி­னைக்­கு­ரியது என்­றெல்லாம் கூறிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இனப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு ஒரு போதும் நடக்­காது என்ற நிலைப்­பாட்­டையும் கொண்­டுள்­ளார்கள்.

அர­சி­யலில் எதுவும் நடக்­காது என்று தாமே முடி­வு­களை எடுப்­பது முட்­டாள்­களின் அர­சியல் பாதை­யா­கவே இருக்கும். ஆட்­சி­யா­ளர்கள் அர­சியல் தீர்வு அவ­சி­ய­மென்று உணர்ந்­துள்­ளார்கள். அதனை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு முன் வராது இருப்­ப­தற்கு பிர­தான காரணம், அது சிங்­கள மக்­களின் வாக்­கு­களில் பாரிய வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்தும் என்­ப­தாலும், சிங்­கள மக்கள் சார்­பான இன­வாதப் போக்கை பின்­பற்­றி­னால்தான் ஆட்­சியை பிடித்துக் கொள்­ள­லா­மென்ற எண்­ணத்­தி­னாலுமே ஆகும்.  இதனாலேயே  அர­சியல் தீர்வு விட­யத்தில் ஏமாற்று நாட­கத்தை ஆடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

பௌத்த மேலா­திக்கவா­தத்தை முத­லீடு செய்து ஆட்­சியை பிடித்­த­வர்­களின் முக­மூ­டி­க­ளுக்குப் பின்னால் உள்ள நிஜத்தை சிங்­கள மக்கள் மிகத் தெளி­வாகப் புரிந்­ததன் மறு­பக்­கம்தான் அதி­கா­ரங்­களை இழந்­த­மைக்கு கார­ண­மாகும்.

 ஆகவே, கடந்த காலங்­களில் சிங்­கள மக்­களின் சிந்­த­னைக்கும், தற்­போ­தைய சிந்­த­னைக்­கு­மி­டையே பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இன்­றைய பாரா­ளு­மன்­றத்தில் உள்ள உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் நிரா­க­ரிக்கும் மனோ­நி­லையை பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்கள் பெற்­றுள்­ளார்கள்.

ஆகவே, அர­சி­யலில் எதுவும் நடக்கும் என்ற நிலைப்­பாட்டில் செயற்­பட வேண்டும். அதுவே புத்­தி­சா­து­ரி­ய­மான அர­சி­ய­லாகும். மாற்­றங்கள் நடை­பெறும் போது அதில் முஸ்லிம் சமூ­கத்தின் வகி­பாகம் எப்­படி இருக்க வேண்­டு­மென்ற முன் ஆயத்தம் அவ­சி­ய­மாகும். எதுவும் நடக்­காது என்று கொட்­டாவி விட்டுக் கொண்­டி­ருக்க முடி­யாது. அவ்­வாறு இருக்கும் போது அர­சியல் தீர்வும் வரு­மாயின் முஸ்­லிம்கள் எந்த அர­சியல் அதி­கா­ரங்­களும் இல்­லா­த­வர்­க­ளாக வாழ வேண்­டி­யேற்­படும். அந்­நிலை நீண்ட காலத்தின் பின்னர் முஸ்­லிம்­களின் பாது­காப்பு, இருப்பு என்­ப­வற்­றிக்கு பாதக நிலையை தோற்­று­விக்கும்.

அர­சியல் தீர்வு விட­யத்தில் முஸ்லிம் கட்­சி­க­ளி­டையே நிலை­யான நிலைப்­பாடும், ஆவ­ணப்­ப­டுத்­தலும் இல்­லா­தி­ருக்­கின்ற அதே வேளையில், முஸ்லிம் கட்­சிகள் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்­காக ஒற்­று­மைப்­பட்டு, இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு, காணிப் பிரச்­சினை, மீள்­கு­டி­யேற்றம், உள்­ளிட்ட அனைத்து விவ­கா­ரங்­க­ளிலும் பிரிந்தே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்லிம் கட்­சி­க­ளையும், முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளையும் ஒன்­றி­ணைத்து முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தீர்க்­க­மான முடி­வு­களை எடுப்­ப­தற்கு அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபையோ, மாவட்ட ரீதியில் உள்ள பள்­ளி­வா­சல்கள் மற்றும் நிறு­வ­னங்­களின் சம்­மே­ள­னமோ வேறு சமூக அமைப்­புக்­களோ நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை. முஸ்லிம் கட்­சிகள் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­காது திசை­மா­றிய பற­வைகள் போன்று இருப்­பதை இனியும் ஏற்றுக் கொள்ள முடி­யாது.

முஸ்­லிம்­க­ளி­டையே பல அர­சியல் கட்­சிகள் உள்­ளன. தேசிய கட்­சிகள் உட்­பட எல்லா அர­சியல் கட்­சி­க­ளிலும் முஸ்­லிம்கள் சார்பில் அர­சி­யல்­வா­திகள் உள்­ளனர்.

ஒவ்­வொரு பாரா­ளு­மன்­றத்­திலும் முஸ்­லிம்கள் சார்பில் 20 இற்கும் குறை­யாத பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருந்து வரு­கின்­றார்கள். எல்லா ஆட்சிக் காலத்­திலும் முஸ்லிம் அமைச்­சர்கள் உள்­ளார்கள்.

இன்று வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக அலி சப்ரி இருப்­பதைப் போன்று மிக முக்­கிய அமைச்சர் பத­வி­க­ளையும் முஸ்­லிம்கள் வகித்­துள்­ளார்கள். இத்­தனை இருந்தும் முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகள் முன் வைக்­கப்­ப­ட­வில்லை. ஆட்­சி­யா­ளர்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு கூட முழு மனதைக் கொண்­டி­ருக்­க­வில்லை. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்சர் உள்­ளிட்­ட­வர்கள் பத­வி­களின் பின்னால் வாய் பிளந்து நின்று கொண்­டி­ருப்­ப­தனால் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களைப் பெற்றுக் கொடுக்கும் எண்­ணத்தை கைவிட்­டுள்­ளார்கள். இத­னால்தான் அர­சியல் தீர்வு விட­யத்­திலும் மௌன­மாக தொடர்ந்தும் உள்ளனர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி தேவைப்பட்டால் முட்டி மோதி­யா­வது சமூ­கத்தின் எதிர்­காலம் சிறப்­பாக இருப்­ப­தற்­கு­ரிய செயற்­திட்­டங்­களை வகுக்­கா­துள்­ளார்கள். முஸ்லிம் சமூ­கத்தின் பீடைகளாக  முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களே உள்­ளார்கள்.

இந்த நோயா­ளி­க­ளிடம் முஸ்லிம் சமூகம் தமது எதிர்­கா­லத்தை ஒப்­ப­டைத்­துள்­ளதால் முழு சமூ­கமும் நோயா­ளிகளாகிக் கொண்­டி­ருக்­கின்­றது. தமது அர­சியல் கட்சி மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பிற்­போக்கு செயற்­பா­டுகள் குறித்து கேள்வி கேட்காத தனிநபர்களைக் கொண்டதொரு சமூகமாக முஸ்லிம்கள் உள்ளார்கள். அரசியல்வாதிகளின் எல்லா நடவடிக்கைகளையும் அங்கீகரித்துக் கொண்டிருப்பது அடிமை வாழ்வுக்கு சமமாகும். சமூகம் கேள்வி கேட்காத காரணத்தினால்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் தாங்கள் நினைத்த மாதிரி நடந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகவே,  முஸ்லிம் கட்சிகள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை வெறும் பார்வையாளராக இருந்து பார்ப்பதில்   இருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்.

அரசியல் தீர்வு முதல் முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானதாகும்.  ஆகவே, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் உண்மையாக சமூகத்திற்காக செயற்பட வேண்டும். ஆட்சியாளர்களையும், அமைச்சர்களையும் வாழ்த்துவதற்கு மாத்திரமே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைப்புகளும் பெரும ்பாலும் செயற்பட்டுக் கொண்டி ருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right