இராணுவத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு

Published By: Vishnu

05 Nov, 2023 | 03:28 PM
image

என்.கண்ணன்

இலங்கை இரா­ணு­வத்­துக்குப் பயிற்சி அளிப்­ப­தற்கு மேல­தி­க­மாக 23 மில்­லியன் இலங்கை ரூபாவை கூடு­த­லாகச் செல­வி­ட­வுள்­ள­தாக இந்­தியா அறி­வித்­தி­ருக்­கி­றது.

இது இந்­திய ரூபா மதிப்பில், 58 இலட்­சத்து 75 ஆயி­ரத்து 900 ரூபா­வாகும்.

மேஜர் ஜெனரல் சந்­தன விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான, இலங்கை இரா­ணுவ உயர் அதி­கா­ரிகள் குழு­வொன்று, கடந்த 27ஆம் திகதி இலங்­கைக்­கான இந்­திய பதில் தூதுவர், சத்­ய­னஜால் பாண்­டேயை சந்­தித்­தி­ருந்­தது.

‘மித்ர சக்தி’ என்ற பெயரில் இந்­திய– - இலங்கை இரா­ணு­வங்கள் ஆண்டு தோறும் நடத்தும் கூட்டுப் பயிற்சி மற்றும் எதிர்­கால பயிற்சித் திட்­டங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டிய போதே, இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்­கான பயிற்­சி­க­ளுக்கு மேல­தி­க­மாக 23 இலட்சம் ரூபாவை வழங்­கு­வது குறித்து அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த நிதி ஒதுக்­கீடு பற்றி இந்­தியத் தூத­ரகம் தனது ‘எக்ஸ்’ (டுவிட்டர்) பக்­கத்தில் பதி­விட்­டுள்ள போதும், மேல­தி­க­மான எந்த தக­வ­லையும், இந்­தியத் தூத­ரகம் வெளி­யி­ட­வில்லை.

இந்த நிதி ஒதுக்­கீடு, இலங்கை-– இந்­திய கூட்டுப் பயிற்­சிக்­கா­னதா? அல்­லது இந்­தி­யாவில் பயிற்சி அளிக்­கப்­படும் இலங்கைப் படை­யி­ன­ருக்­கா­னதா? ஒவ்­வொரு ஆண்டும் இந்த மேல­திக நிதி ஒதுக்­கீடு வழங்­கப்­ப­டுமா? அல்­லது ஒரே முறையில் இந்த ஒதுக்­கீடு இடம்­பெற்­றுள்­ளதா என்ற எந்த விப­ரங்­களும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இலங்­கையில் போர் முடி­வுக்கு வந்த பின்னர், இந்­திய – இலங்கை இரா­ணு­வங்கள் இணைந்து, மித்­ர­சக்தி என்ற பெயரில், 12 நாட்கள் கூட்டுப் பயிற்­சி­களை ஆண்டு தோறும் நடத்தி வரு­கின்­றன.

இரு தரப்­பிலும் தலா 120 இரா­ணு­வத்­தினர் பங்­கேற்கும் இந்த ஆண்­டுக்­கான கூட்டுப் பயிற்சி கடந்த ஏப்ரல் மாதம் இடம்­பெற்­றது.

இது 10 ஆவது கூட்டுப் பயிற்­சி­யாகும். 11ஆவது கூட்டுப் பயிற்சி இந்­தி­யாவில் அடுத்த ஆண்டு நடத்­தப்­பட வேண்டும்.

அதற்­கான நிதி ஒதுக்­கீட்டைத் தான் இந்­தியா அதி­க­ரித்­தி­ருக்­கி­றதா அல்­லது, ஆண்டு தோறும் இந்­தியா அளித்து வரும் பயிற்­சிக்­கான ஒதுக்­கீட்டை அதி­க­ரித்­தி­ருக்­கி­றதா என்ற கேள்வி இருக்­கி­றது.

இலங்கை இரா­ணு­வத்­துக்கு அதி­க­ளவில் பயிற்­சி­களை அளித்து வரு­கின்ற நாடு இந்­தியா தான்.

முன்னர், 800 வரை­யான படை­யி­னரும் அதி­கா­ரி­களும் இந்­தி­யாவில் ஆண்­டு­தோறும் பயிற்­சி­களைப் பெற்­றனர்.தற்­போது இந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

கோட்­டா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது, 2021 ஒக்டோபர் மாதம் இந்­திய இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் நர­வானே, கொழும்­புக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்தார்.

அப்­போது, இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த ஜெனரல் சவேந்­திர சில்வா,   இந்­தியா 1,000 வரை­யான இலங்கைப் படை­யி­ன­ருக்கு பயிற்­சி­களை அளித்து வரு­வ­தா­கவும், இப்­ப­யிற்சி வாய்ப்­பு­களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரி­யி­ருந்தார்.

அதன் பின்னர்,  கோட்­டா­பய ராஜபக் ஷவைச் சந்­தித்த ஜெனரல் நர­வானே, இலங்கைப் படை அதி­கா­ரிகள் 50 பேருக்கு விசே­ட­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட பயிற்சி நெறி ஒன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார்.

அதே­வேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்­தி­யாவில் பயிற்சி பெற்ற இலங்கை படை அதி­கா­ரி­களின் ஒன்­று­கூடல் நிகழ்வில் உரை­யாற்­றிய இந்­தியத் தூதுவர் கோபால் பாக்லே, ஆண்­டு­தோறும் 1500 இலங்கைப் படை­யி­ன­ருக்கு இந்­தியா பயிற்சி அளிக்கும் என்று கூறி­யி­ருந்தார்.

எனவே, மேல­திக படை­யி­னரை பயிற்­று­விப்­ப­தற்­கா­கவே இந்த 23 மில்­லியன் ரூபாவை ஒதுக்க இந்­தியா முன்­வந்­தி­ருக்­கி­றதா என்ற கேள்­வியும் உள்­ளது.

சவா­லான நேரங்­க­ளிலும் இலங்கைப் படை­யி­ன­ருக்கு இந்­தியா பயிற்­சி­களை வழங்­கி­யது என்ற கருத்­தையும் அப்­போது இந்­தியத் தூதுவர் கோபால் பாக்லே வெளி­யிட்­டி­ருந்தார்.

அயல்­நாட்­டுக்கு முன்­னு­ரிமை என்ற கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே இந்­தியா இந்தப் பயிற்­சி­களை அளித்து வரு­வ­தாக குறிப்­பிட்­டாலும், இந்­தியா தனது நலன்கள் மற்றும், பிராந்­திய பாது­காப்பு நலன்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த பயிற்­சி­களை வழங்­கு­கி­றது.

இந்­தியத் தூதுவர் ‘சவா­லான நேரங்கள்’ என்று குறிப்­பிட்­டது எதனை என்ற தெளிவு இல்­லாது போனாலும், சவா­லான காலப்­ப­கு­திகள் பல இருந்­தன என்­பதை மறுக்க முடி­யாது.

இலங்கைப் படை­யி­ன­ருக்கு பல தசாப்­தங்­க­ளாக இந்­தி­யாவில் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கின்ற போதும், 1980களின் நடுப்­ப­குதி- இந்­தி­யா­வுக்கு சவா­லான காலப்­ப­கு­தி­களில் முக்­கி­ய­மா­னது.

அந்தக் கால­கட்­டத்தில் இலங்கை இரா­ணுவ அதி­கா­ரி­க­ளுக்கு தமி­ழகம் உள்­ளிட்ட பல இடங்­களில், பயிற்­சிகள் அளிக்­கப்­பட்­டன.

அதே நேரத்தில், இந்­திய இரா­ணுவ அதி­கா­ரி­களின் மூலம், விடு­தலைப் புலிகள் உள்­ளிட்ட தமிழ் போராளிக் குழுக்­க­ளுக்கும் பயிற்­சிகள் அளிக்­கப்­பட்­டன.

இந்­திரா காந்தி பிர­த­ம­ராக இருந்த காலப்­ப­குதி அது. அப்­போது தான், இந்­தியா தமிழ் போராளிக் குழுக்­க­ளுக்கு பயிற்­சி­களை அளிக்கத் தொடங்­கி­யது.

முதலில் அந்தப் பயிற்சித் திட்­டத்தில் விடு­தலைப் புலிகள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. திரு­நெல்­வே­லியில் கண்­ணி­வெடி மற்றும் கரந்­தடிப் பாணி­யி­லான தாக்­கு­தலை நடத்தி 13 இரா­ணு­வத்­தி­னரைக் கொன்று- பிராந்­தி­யத்­தி­லேயே அதிர்ச்சி அலை­களைப்  பரவச் செய்­தி­ருந்த போதும், விடு­தலைப் புலி­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்க இந்­தியா முதலில் இணங்­க­வில்லை.

‘றோ’ எனப்­படும் இந்­தியப் புல­னாய்வு அமைப்பு, பரிந்­து­ரைத்தால் தான், இந்­திய இரா­ணுவப் பயிற்சித் திட்­டத்­துக்குள் உள்­வாங்­கப்­படக் கூடிய நிலை காணப்­பட்­டது.

‘றோ’ தான் விடு­தலைப் புலிகள் உள்­ளிட்ட தமிழ் இயக்­கங்­க­ளுக்கு பயிற்சி அளித்­தது என்ற கருத்து இப்­போதும் பர­வ­லாக காணப்­ப­டு­கி­றது.

புல­னாய்வு அமைப்­புகள் அவ்­வாறு இரட்­டைத்­தன்­மை­யுடன் நடந்து கொள்­வது வழக்கம்.

இஸ்­ரேலின் மொசாட் புல­னாய்வுப் பிரிவும் கூட இவ்­வாறு இலங்கைப் படை­யி­ன­ருக்கும், தமிழ்ப் போராளிக் குழு­வி­ன­ருக்கும் ஒரே நேரத்தில் பயிற்­சி­களை வழங்­கி­ய­தாக முன்னர் தக­வல்கள் வெளி­யா­கின.

ஆனால், இந்­தி­யாவில் தமிழ் இயக்­கங்­க­ளுக்கு பயிற்சி அளிப்­பது றோவின் திட்டம் அல்ல. அதனைச் செயற்­ப­டுத்­தி­யதும் றோ அல்ல.

இந்­திய அர­சாங்கம் அதனை இப்­போது ஒப்புக் கொள்ள மறுத்­தாலும், இந்­திரா காந்தி அர­சாங்கம் தான் இந்­திய இரா­ணு­வத்தின் மூலம் பயிற்­சி­களை வழங்­கி­யது.

ஜே.ஆர்.ஜய­வர்­தன அர­சாங்கம் கடும் இரா­ணுவப் போக்கில் இருந்த அந்தக் காலப்­ப­கு­தியில், தமிழ் இயக்­கங்­க­ளுக்குப் பயிற்­சி­களை அளித்து அரச படை­க­ளுக்கு அழுத்தம் கொடுப்­பதன் மூலம் ஒரு சமா­தான தீர்­வுக்கு இறங்கி வரச் செய்­வ­தற்­கா­கவே ஆயுதப் பயிற்­சிகள் வழங்­கப்­பட்­ட­தாக விடு­தலைப் புலி­களின் அர­சியல் ஆலோ­சகர் அன்ரன் பால­சிங்கம் தனது ‘போரும் சமா­தா­னமும் ’ என்ற நூலில் எழு­தி­யி­ருந்தார்.

இலங்கைத் தீவின் இறைமை  மற்றும் பிர­தேச ஒரு­மைப்­பாட்­டுக்கு பாதிப்பு வராத வகையில், ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் நியா­ய­மான அர­சியல் தீர்வை பெற்றுக் கொடுப்­பது தான் இந்­திரா காந்­தியின் தந்­தி­ரோ­பாயம் என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

முதலில் றோவுடன் நல்­லு­றவை பேணத் தவ­றி­யதால் இழக்­கப்­பட்ட இந்த பயிற்சி வாய்ப்பு, 1983 நவம்­பரில், விடு­தலைப் புலி­க­ளுக்கும் கிடைத்­தது.

உத்­தரப் பிர­தே­சத்தில் புலி­களின் முத­லா­வது அணிக்கு இந்­திய இரா­ணு­வமே பயிற்சி அளித்­தது.

வரை­ப­டங்­களை உரு­வாக்­குதல், கண்­ணி­வெ­டிகள் மற்றும் வெடி­பொ­ருட்­களை கையா­ளுதல், தாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஆயு­தங்­களை கையா­ளுதல் போன்ற பயிற்­சி­களும் அப்­போது, இந்­திய இரா­ணு­வத்­தினால் விடு­தலைப் புலிகள் உள்­ளிட்ட தமிழ் இயக்­கங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.

அதே நேரத்தில் இலங்கைப் படை­யி­ன­ருக்கு கெரில்லா எதிர்ப்பு மற்றும் முறி­ய­டிப்பு பயிற்­சி­க­ளையும், காட்டுப் போர்­முறை தொடர்­பான பயிற்­சி­க­ளையும் இந்­தியா வழங்கிக் கொண்­டி­ருந்­தது.

ஒரு பக்­கத்தில் எப்­படி அடிப்­பது என்று இந்­தியா கற்றுக் கொடுத்துக் கொண்டே இன்­னொரு பக்­கத்தில் எப்­படி அதனை முறி­ய­டிப்­பது என்றும் பயிற்­று­வித்துக் கொண்­டி­ருந்­தது.

இந்த கால­கட்டம் இந்­தி­யா­வுக்கு சவா­லா­னது. ஏனென்றால் இரண்டு தரப்­பு­க­ளி­னதும் நம்­பிக்­கையை இந்­தியா பெற வேண்­டி­யி­ருந்­தது.

அது­போல, இலங்­கையில் இந்­தியப் படை­யினர் நிலை­கொண்­டி­ருந்த போது, பிரே­ம­தாச அர­சாங்கம் அவர்­களை நாட்டை விட்டு வெளி­யே­று­மாறு கோரி­யது.

இந்­தியா வந்த நோக்­கத்தை நிறைவு செய்­யாமல் வெளி­யேற மறுத்­தது. அப்­போது இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் இரா­ஜ­தந்­திர முறுகல் தோன்­றி­யது.

இரண்டு நாட்டு இரா­ணு­வங்­களும் மோது­கின்ற நிலை தோன்றக் கூடிய சூழலும் காணப்­பட்­டது. அப்­போதும் இலங்கைப் படை­யி­ன­ருக்கு இந்­தியா பயிற்சி அளித்துக் கொண்­டி­ருந்­தது.

பின்னர், விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் நடந்து கொண்­டி­ருந்த போதும் இலங்கைப் படை­யி­ன­ருக்குப் பயிற்­சி­களை வழங்­கி­யது இந்­தியா.

ஆரம்­பத்தில் அதற்கு எதிர்ப்­புகள் இல்­லாத போதும், 2009இற்குப் பின்னர் குறிப்­பாக ஜெயலலிதா தமிழக முதல்வராக வந்த பின்னர் இலங்கைப் படையினருக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார்.

தமிழக மண்ணில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த இலங்கைப் படையினர் அதனால் வெளியேறுகின்ற நிலையும் ஏற்பட்டது.

இதுவும் இந்தியாவுக்கு சலாலான காலகட்டம் தான்.

இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாகப் பயிற்சிகளை அளிப்பதன் மூலம், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் அதிக பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதை தடுக்க இந்தியா முனைகிறது.

அதற்காக கூடுதல் வாய்ப்புகளை இலங்கைக்கு வழங்குகிறது. எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளின் காலத்தில், எதிர்கொண்டது போன்ற சவாலான தருணத்தை இந்தியா இப்போது எதிர்கொள்ளவில்லை.

அதனால் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தோ நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது  குறித்தோ யாரும் கவலைப்படவுமில்லை.  எதிர்ப்பை வெளியிடவுமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'உள்நாட்டு அரசியல் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாத்தாலும் பொறுப்புக்கூறலை...

2025-03-26 13:31:44
news-image

அபிவிருத்திக்கான தடைகளை அகற்றுதல்

2025-03-26 14:11:02
news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 14:14:36
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53