10 மில்லியன் ரூபா பண மோசடி ; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 3

02 Nov, 2023 | 04:48 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 10 மில்லியனுக்கு அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம்  குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் சந்தேகநபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடைய பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கு எதிராக   சிலாபம், கனேமுல்ல, வெலிகட, மீகொட, ஆனமடுவ, கடவத்தை, பிலியந்தல மற்றும் குருநாகல் பகுதிகளில் இடம்பெற்ற 14 பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தினால்  10 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள, அதேவேளை பாணந்துறை மேல் நீதிமன்றத்தினால் ஒரு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் நேற்று புதன்கிழமை (01) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38