உலகின் கண்டன அறிக்கைகள் பலஸ்தீனத்தில் அமைதியை கொண்டு வருமா?

Published By: Vishnu

29 Oct, 2023 | 06:17 PM
image

ஏ.எல்.நிப்றாஸ்

'இஸ்­ரேலின் தாக்­கு­தலால் நாங்கள் ஒவ்­வொரு நொடியும் இறந்து கொண்­டி­ருக்­கின்றோம். எங்கள் வீடு­களில் பலர் ஏற்­கெ­னவே கொல்­லப்­பட்டு, 'சஹீத்' (வீர மரணம்) அடைந்து விட்­டனர். நாங்கள் அனா­தை­க­ளாக, உண்ண உண­வின்றி தெருவில் நிற்­கின்றோம். இங்கே பாது­காப்­பான இடம் என்று எதுவும் இல்லை. ஆனாலும், இந்த பலஸ்­தீன மண்ணை விட்டு எங்கும் செல்ல மாட்டோம். சொல்­லுங்கள்   இது­தானா உங்­க­ளது உலக நாடுகள் எங்கள் மீது காட்­டு­கின்ற நீதி?'

அடை­யாளம் தெரி­யாமல் சிதைந்து போன பலஸ்­தீ­னத்தில் அடைக்­கலம் தேடி ஓடிக் கொண்­டி­ருக்­கின்ற சிறுவர், சிறு­மி­யர்கள் இந்த முழு உல­கத்­தையும் பார்த்துப் பேசிய வார்த்­தை­கள்தான் இவை. இந்த வார்த்­தை­க­ளுக்குப் பின்னால் இருக்­கின்ற வலி, வலி­யதும் - கொடி­யதும் ஆகும். இதற்­கான பதிலை உலகம் இன்னும் தயார் செய்­ய­வில்லை.

இதே விட­யத்­தையே, ஐ.நா. சபையின் பாது­காப்பு பேர­வையில், உரை­யாற்­றிய பலஸ்­தீன நாட்டு பிர­தி­நி­தி­யான பெண் இராஜ­தந்­தி­ரியும் குறிப்­பிட்­டுள்ளார். இதனைக் கூறும் போது துக்கம் தாளாமல் அவர் அழு­ததை முழு உல­கமே பார்த்­தது.

'காஸாவில் குறைந்­தது 20 இலட்சம் மக்கள் உள்­ளனர். அவர்­களுள் அரை­வா­சிப்பேர் குழந்­தைகள்.  எமது மக்­க­ளுக்கு நீர் இல்லை. மின்­சாரம் இல்லை, எரி­பொருள் இல்லை. மருந்­துகள் இல்லை. பாது­காப்பு இல்லை. தஞ்­சம்­பு­கு­வ­தற்கு பொருத்­த­மான இட­மில்லை. கொல்­லப்­பட்­ட­வர்கள் பாரிய குழி­களில் புதைக்­கப்­ப­டு­கின்­றார்கள். மற்­ற­வர்கள் மர­ணத்­திற்­காக காத்­தி­ருக்­கின்­றார்கள்.

பலஸ்­தீ­னத்தில் சிவி­லி­யன்கள் இல்லை என்றும், பலஸ்­தீ­னர்கள் அழிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் என்ற தோர­ணை­யிலும் இதனை இஸ்ரேல் அரங்­கேற்­று­கின்­றது. ஆனால், அங்கே நடப்­பது யுத்­த­மல்ல. தெளி­வான இன அழிப்பு, போர்க்­குற்றம். பலஸ்­தீ­னர்­களை பூர்­வீக மண்ணில் இருந்து துடைத்­தெ­றியும் திட்­ட­மாகும். எமக்கு தேவை உட­ன­டி­யாக ஒரு போர் நிறுத்­தமும் நீதியும் அமை­தி­யு­மாகும்' என்று பலஸ்­தீன பிர­தி­நிதி தழு­த­ழுத்த குரலில் சொல்­லி­ய­ழுதார்.  

பலஸ்­தீன போர் பற்­றிய உலகின் பல நாடுகள் மற்றும் மக்­களின் பார்வை தெளி­வா­ன­தாக உள்­ளது. இது வழக்­கத்தை விட சற்று மாற்­ற­மா­ன­தாக தெரி­கின்­றது. அதா­வது, ஊட­கங்கள் மூலம் தமக்கு விரும்­பி­யதை காண்­பித்து பிர­சாரம் செய்யும் மேற்­கு­லகின் வழக்­க­மான உத்தி, இம்­முறை படு­தோல்வி அடைந்­துள்­ளது.  பலஸ்­தீ­னத்தில் நடக்­கின்ற மனிதப் பேர­வ­லங்­களின் உண்­மைத்­தன்­மையை நவீன ஊட­கங்கள் ஊடாக உலகம் பார்க்கக் கூடி­ய­தாக இருப்­பதும் அது குறித்து தமது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த முடி­வதும் இந்த மாற்­றத்­திற்கு ஒரு காரணம் எனலாம்.

இந்தப் பின்­ன­ணியில், அங்கு நான்கு விட­யங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பதை உல­கமே ஏற்றுக் கொண்­டுள்­ளது. அதா­வது, அங்கு சர்­வ­தேச போர் விதி மு­றைகள் மீறப்­ப­டு­கின்­றன. யுத்தக் குற்றம் இடம்­பெ­று­கின்­றது. இன அழிப்பு நடந்­தே­று­கின்­றது. மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான குற்றம் இழைக்­கப்­ப­டு­கின்­றது. மனி­தா­பி­மா­னமும் மனித உரி­மை­களும் கேலிக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த யுத்­தத்தை ஐ.நா. உள்­ளிட்ட பல நாடுகள், அமைப்­புக்கள் எதிர்க்­கின்ற போதும் கூட, இஸ்ரேல் தன்­னோடு சில 'சண்­டி­யர்­க­ளையும்', 'பொலிஸ்­கா­ரர்­க­ளையும்' வைத்துக் கொண்டு  எத­னையும் கணக்கில் எடுக்­காது, பெரும் அழிச்­சாட்­டி­யத்தை தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இதற்கு ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும்  சில நாடுகள் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது மனி­த­குல நாக­ரி­கத்­தின்­படி பெரும் அபத்­த­மாகும்.

பாது­காப்புச் சபையில் உரை­யாற்­றிய ஐ.நா. செய­லாளர் நாயகம், ஹமாஸின் தாக்­கு­தலை கண்­டிக்கத் தவ­ற­வில்லை. ஆனால், அதனைக் கார­ணம்­காட்டி, பலஸ்­தீ­னத்தில் உள்ள பொது மக்­களை கொல்­வ­தையும், போர் விதி­மு­றை­களை மீறு­வ­தையும், யுத்தக் குற்றம் புரி­வ­தையும் ஏற்றுக் கொள்­ளவே முடி­யாது என்று மீள வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்­திய தாக்­கு­த­லோடு மட்டும் இந்த முரண்­பாடு ஆரம்­பிக்­க­வில்லை என்றும், 56 வரு­டங்­க­ளாக பலஸ்­தீன மண், இஸ்­ரே­லினால் அள­வுக்­க­தி­க­மாக ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு, மக்கள் கொல்­லப்­பட்டு, அக­தி­க­ளாக்­கப்­பட்டு வந்­துள்­ளனர் என்­ப­தையும், அவர்  சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இதை விட காட்­ட­மான அறிக்­கை­யொன்றை ஐ.நா. விசேட அறிக்­கை­யாளர் வெளி­யிட்­டுள்ளார்.  அவ­ரது அறிக்­கை­யின்­படி   பலஸ்­தீ­னத்தில் 2 மில்­லியன் மக்கள் இருக்­கின்­றார்கள். அவர்­களுள் 16 இலட்சம் பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். இரு  தினங்­க­ளுக்கு முன்பு வரை இஸ்­ரேலின் தாக்­கு­தலால் 5,700 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்­களுள் 40 சத­வீ­த­மானோர் குழந்­தைகள், சிறு­வர்­க­ளாவர். குறைந்­தது 15 ஆயிரம் பேர் கடு­மை­யான காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். சொத்து, உடமை இழப்­புக்­க­ளுக்கு கணக்­கில்லை.

இதே­வேளை, பிந்திக் கிடைத்த தக­வல்­களின் படி பலஸ்­தீ­னத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை  7 ஆயி­ரத்தை தாண்­டி­விட்­ட­தாக அறிய முடி­கின்­றது. ஹமாஸ் இயக்கத்தின் தாக்­கு­தலால் இஸ்­ரேலில் அப்­பாவி பொது மக்கள் கொல்­லப்­பட்­டமை நியா­யப்­ப­டுத்த முடி­யா­ததே. ஆயினும், பலஸ்­தீ­னத்தில் ஹமாஸை தாக்­கு­வ­தாக   கூறிக் கொண்டு, இஸ்ரேல் தொடர்ந்து செய்யும் அழிச்­சாட்­டி­யத்தால் ஏற்­பட்­டுள்ள உயிர் இழப்­புகள் அதை­விடப் பன்­ம­டங்­கா­னவை.

இது­வெல்லாம் ஒரு­புறம் இருக்­கட்டும். இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு போரை நிறுத்­து­வ­தற்கு, பலஸ்­தீ­னத்தின் சுய­நிர்­ண­யத்தை, இறை­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஐ.நா.வும், ஏனைய உலக நாடு­களும், நீதி மற்றும் உரிமை அமைப்­புக்­களும் உலக மக்கள் என்ற வகையில் நாமும், என்ன செய்­துள்ளோம்? அது எந்­த­ள­வுக்கு சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது, என்­பதே இப்­போ­துள்ள முக்­கிய கேள்­வி­யாகும்.

2020 இலி­ருந்து 'ஒற்றை உலக ஒழுங்கு' மெது­மெ­து­வாக மாறத் தொடங்­கி­யுள்­ளது. அமெ­ரிக்க டொல­ரையும், அமெ­ரிக்­கா­வையும் மையப்­ப­டுத்­தி­ய­தான  எழு­தப்­ப­டாத விதியை மாற்ற சீனா, ரஷ்யா உள்­ளிட்ட நாடுகள் முன்­னிற்­கின்­றன. அதற்­காக இந்த பலஸ்­தீன யுத்­தமும் சில நாடு­களால் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் என்­பதை கவ­னிக்க வேண்டும்.

இந்தப் பின்­ன­ணியில், அரபு நாடுகள் மட்­டு­மன்றி கணி­ச­மான உலக நாடுகள், ஆட்­சி­யா­ளர்கள், பலஸ்­தீன மக்­க­ளுக்கு பௌதீக ரீதி­யா­கவும் ஆத்­மார்த்த ரீதி­யா­கவும் ஆத­ர­வ­ளிப்­ப­தாக அறி­வித்­துள்­ளனர்.  முற்­போக்­கான யூதர்கள், கிறிஸ்­த­வர்கள், தமி­ழர்கள் என பேத­மற்று இலட்­சக்­க­ணக்­கான மக்கள் பலஸ்­தீன மக்­க­ளுக்கு நீதி வேண்டி குரல் கொடுக்­கின்­றனர். நவீன ஊட­கங்கள் நிரம்பி வழியும் உலகில் யதார்த்­தத்தை மறைப்­பது சாத்­தி­ய­மற்றுப் போயுள்­ளது.

உல­குக்கு மனித உரிமை, நீதி போதிக்கும் ஐரோப்­பிய ஒன்­றியம், அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட சில நாடுகள் இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வ­ளிக்­கின்ற போதும், அந்­தாட்டு மக்கள் நீதியின் பக்கம் நிற்­கின்­றனர் என்­பது முக்­கி­ய­மா­னது,

ஐரோப்­பிய ஒன்­றிய அமர்வு, பிரித்­தா­னிய பாரா­ளு­மன்றம், அயர்­லாந்து பாரா­ளு­மன்றம், அவுஸ்­தி­ரே­லிய மற்றும் கனடா பாரா­ளு­மன்றம் என கிட்­டத்­தட்ட அனைத்து பாரா­ளு­மன்­றங்­க­ளிலும் எம்.பிக்கள் பகி­ரங்­க­மாக பலஸ்­தீ­னத்­திற்­காக பேசு­கின்­றனர். இஸ்ரேல் செய்­வது மனி­த­கு­லத்­திற்கு எதி­ரான போர்க் குற்றம் எனக் கூறு­கின்­றனர்.

இன, மத பேதங்­களைக் கடந்து, நீதிக்­காக குரல்­கொ­டுக்­கின்ற மக்­களின், அர­சி­யல்­வா­தி­களின் தொகை அதி­க­ரித்­துள்­ளது. யார் என்­றாலும் மனி­தர்கள் என்ற அடிப்­ப­டையில் நோக்­கு­கின்ற மன­நிலை உல­க­ளவில் வளர்ச்சி­ கண்­டுள்­ள­தாக தெரி­கின்­றது. இது ஒரு முக்­கிய மாற்றம் என்­ப­துடன், இது உலக ஒழுங்கு மாற்­றத்­திலும் செல்­வாக்குச் செலுத்­தலாம்.

எது எப்­ப­டி­யி­ருப்­பினும்,  பலஸ்­தீ­னத்தில் இன்னும் யுத்தம் நடந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. மர­ணங்கள், இடப்­பெ­யர்­வுகள் இடம்­பெற்றுக் கொண்டே இருக்­கின்­றன. ஐ.நா.வும் உலக நாடுகள் பலவும் அறி­வு­றுத்­தியும், பலஸ்­தீன மக்கள் கெஞ்சிக் கூத்­தா­டியும், இஸ்ரேல் அர­சாங்கம் தனது அழிச்­சாட்­டி­யத்தை நிறுத்­த­வில்லை.  

அப்­ப­டி­யானால், ஐ.நா. மற்றும் மனித உரி­மைக்­காக குரல்­கொ­டுக்­கின்ற அமைப்­புக்­களும் அனு­தாப, கண்­டன அறிக்­கை­க­ளையும், அழுத்­தங்­க­ளையும், புள்­ளி­வி­பா­ரங்­க­ளையும் மட்டும் வெளி­யிட்டுக் கொண்­டி­ருக்க, பலஸ்­தீன மக்கள் விட­யத்­திலும்; உலக நீதி தோற்­றுப்­போ­குமா, என்ற கவலை தோய்ந்த கேள்வி எழு­கின்­றது.

ஐ.நா.வும் ஏனைய அமைப்­புக்­களும் மூன்­றா­வது உலக மகா யுத்தம் ஒன்று ஏற்­ப­டு­வதை தடுத்­துள்­ளன என்­பதை மறுக்க முடி­யாது. ஆனால், உலக யுத்தம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டாத ஏகப்­பட்ட யுத்­தங்கள், ஆக்­கி­ர­மிப்­புக்கள், இன­அ­ழிப்­புக்கள் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன. பலஸ்­தீ­னத்தைப் போன்று பல நாடுகளில், பிராந்­தி­யங்­களில் மனித உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ளன. யுத்த விதிகள் மீறப்­பட்டு, போர்க் குற்றம் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது என்பதை மறுக்க முடியாது.

அப்போதெல்லாம், கவலையையும் அறிக்கையையும் வெளியிட்டதைத் தவிர, ஐ.நா. உள்ளிட்ட இதற்காகவே இயங்கும் அமைப்புக்களால் யுத்தங்களை, இன அழிப்பை, மீறல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐ.நா போன்றவற்றின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாலும், உலக சண்டியர்களின் வெறியாலும்,  பல நாடுகளில் பல இலட்சக்கணக்கான மக்கள் பலி எடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே, இந்த முன்னெடுப்புக்கள் போதாது.   வெறுமனே அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும் வழக்கமான அணுகுமுறைகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டும் இருக்காமல், ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புக்களும் நாடுகளும் அதனை விடப் பெரிய கூட்டுப் பலத்தைப் பிரயோகித்தாவது,  பலஸ்தீனத்தில் யுத்தத்தை நிறுத்தி அந்த மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தப் போரிலும், உலக நீதி பார்வையாளராக மட்டுமே இருப்பது வரலாறாக மாறும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்