நான்காவது தூணை அசைத்துப்பார்க்கும் நாடுகள்

Published By: Vishnu

29 Oct, 2023 | 04:27 PM
image

சிவ­லிங்கம் சிவ­கு­மாரன்

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­யின்­மையை முடி­வுக்குக் கொண்­டு ­வ­ரு­வ­தற்­கான சர்­வ­தேச தினம் எதிர்­வரும் நவம்பர் 2 ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் ஊட­கங்­க­ளுக்கும்  எதி­ரான குற்­றங்­க­ளுக்கு நியா­யத்­தையே பெற்­றுத்­த­ராத ஒரு ஜன­நா­யக நாடாக இலங்கை விளங்­கு­கின்­றது. ஜன­நா­ய­கத்தை தாங்கும் நான்­கா­வது தூணாக ஊட­கங்கள் வர்­ணிக்­கப்­ப­டு­வ­துண்டு. அப்­ப­டி­யானால் இந்த நாட்டின் ஜன­நா­ய­க­மா­னது ஒரு தள்­ளாட்ட நிலை­யி­லேயே உள்­ளது என்று தான் கூற வேண்டும். எந்த அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்­தாலும் ஊடக சுதந்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்தும் ஏதா­வ­தொரு வழி­வ­கை­களை ஆராய்­வதே அதன் நோக்­க­மாக உள்­ளது.

ஊட­கங்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகள், அவர்­க­ளுக்கு எதி­ரான மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டமை ஆகிய விட­யங்­களை முப்­பது வருட கால யுத்­தத்தை மாத்­திரம் அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு பார்க்க முடி­யாது.

1997 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1994 ஆம் ஆண்டு வரை­யான ஜே.ஆர். ஜய­வர்­தன மற்றும் ஆர்.பிரே­ம­தாச ஆகி­யோரின் ஐக்­கிய தேசியக் கட்சி  ஆட்சி காலம், பின்னர்  2004 இலி­ருந்து 2014 வரை­யான மஹிந்த ராஜபக் ஷவின்  ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணியின் ஆட்சி காலம் என இரண்டு கால­கட்­டங்­களை நோக்க வேண்­டி­யுள்­ளது. இதில் மஹிந்த ராஜபக் ஷவின்  ஆட்­சி­கா­லமே ஊட­கங்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான அதி­க­மான குற்­றச்­சம்­ப­வங்கள் இடம்­பெற்ற கால­கட்­ட­மாகும்.

அரச ஊடக நிறு­வ­ன­மான ரூப­வா­ஹி­னுக்குள் உட்­பு­குந்து மஹிந்­தவின் விசு­வா­சி­யான மேர்வின் சில்வா புரிந்த அட்­ட­கா­சங்­களை சர்­வ­தே­சமே அறியும். அப்­ப­டி­யானால் தனியார் ஊடக நிறு­வ­னங்கள் எத்­த­கைய மறை­முக அடக்­கு­மு­றையின் கீழ் இருந்­தி­ருக்கக் கூடும் என்­பதை இச்­சம்­பவம் அக்­கா­லத்தில் பல­ருக்கு உணர்த்­தி­யது.

இலங்­கையில், ஊடக அடக்­கு­மு­றைகளில் ஈடுபட்ட எவரும் இதுவரை தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இந்த சம்­ப­வமே ஊடக சுதந்­தி­ரத்­துக்கு எதி­ராக செயற்­படும் ஒரு நாடு என்ற அவப்­பெ­யரை சர்­வ­தே­சத்தின் மத்­தியில் இலங்­கைக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் 17 வருட ஆட்சி காலப்­ப­கு­தியில் சமூக ஊட­கங்கள் கண்டு பிடிக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் இப்­போது ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, சமூக ஊட­கங்­களில் அர­சாங்­கத்தின் மூலம் முன்­னெ­டுக்­கப்­படும் மக்கள் பாதிப்பு செயற்­பா­டு­களை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக பல  சட்­ட­மூ­லங்­களை கொண்டு வரு­வ­தற்கு ஆர்­வ­முள்ள ஒரு­வ­ராக காணப்­ப­டு­கின்றார்.

இதில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாத்­தி­ர­மின்றி சாதா­ரண பொது மக்­களின் கருத்துச் சுதந்­தி­ரமும் பாதிப்பை எதிர்­நோக்­கி­யுள்­ளது. ஆகவே, புதிய சட்­ட­மூ­லங்கள் முழு நாட்­டி­னதும் கருத்துச் சுதந்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­ன­வாக உள்­ளன. இது பார­தூ­ர­மான விட­ய­மாகும். இவ்­வி­ட­யத்தில் மஹிந்த தரப்­பி­ன­ருடன் கைகோர்த்தே ரணில் செயற்­ப­டு­கின்றார். கோட்­டா­பய மற்றும் மஹிந்­த­வுக்கு எதி­ரான அர­க­லய போராட்­டங்கள்  சமூக ஊட­கங்கள் மூல­மா­கவே துரு­வம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. ஆகவே அது குறித்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க மிகவும் எச்­ச­ரிக்­கை­யாக உள்ளார்.

இந்­நி­லையில் இவ்­வ­ருடம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்ள, ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­யின்­மையை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான சர்­வ­தேச தினம் பற்­றிய ஐக்­கிய நாடுகள் சபை­யா­னது பிர­தான தொனிப்­பொ­ரு­ளாக மூன்று விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­து­கின்­றது. இவற்றை    இலங்­கைக்கும் பொருத்தி பார்த்தல் முக்­கி­ய­மா­னது.

* ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான  வன்­மு­றைகள்

* தேர்­தல்­களின்  நேர்மைத் தன்மை

* மக்கள் தலை­மைத்­து­வத்தின் வகி­பாகம்

ஆகிய மூன்று விட­யங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு ஐக்­கிய நாடுகள் சபை­யா­னது தனது அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது. பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சம்­ப­வங்­க­ளுக்­கான தண்­ட­னை­யி­லி­ருந்து விலக்கு பெறு­வ­தா­னது சமீப காலங்­களில் எழுந்­துள்ள மிக சவா­லா­னதும் சிக்­க­லா­ன­து­மான விடயம் என ஐ.நா. சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. ஏனென்றால், உலகின் அனைத்து நாடு­க­ளிலும் ஊடக சுதந்­திரம் பேணப்­ப­டு­கின்­றது என்­பதை உறு­திப்­ப­டுத்த முடி­யாத சூழல் காணப்­ப­டு­கின்­றது.

கருத்துச் சுதந்­திரம் மற்றும் தக­வல்­களை அணு­கு­வ­தற்­கான உரி­மைகள் மீது கட்­டுப்­பா­டு­களை விதிப்­பதில் சில நாடுகள் கடும்­போக்­காக நடந்து கொள்­வதை இது அம்­ப­லப்­ப­டுத்­து­கின்­றது. பொது­நலன் சார்ந்த விட­யங்­களின் பின்­ன­ணியில் உள்ள ஊழல்­களை அம்­ப­லப்­ப­டுத்­துதல், அர­சி­யல்­வா­தி­க­ளிடம் கேள்­வி­களை எழுப்­புதல், அவற்றை அறிக்­கை­யிடல் கார­ண­மாக பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக நீதித்­துறை செயற்­பா­டு­களை பயன்­ப­டுத்­துதல், சில நாடு­களில் பத்­தி­ரி­கை­யா­ளர்கள் கட்­டா­ய­மாக நாடு­க­டத்­தப்­படல் போன்ற விட­யங்­களை ஐ.நா சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

 அதே போன்று நியா­ய­மா­னதும் நேர்­மை­யா­ன­து­மான தேர்­தல்கள் இடம்­பெ­று­வதை  உறுதி செய்யும் மிகப்­பி­ர­தான இடத்தை  ஊட­கங்கள் வகிக்­கின்­றன. ஜன­நா­யக  பண்­பு­களை வலி­யு­றுத்தும் பிர­தான அம்­சங்­க­ளாக ஒரு நாட்டில்  தேர்­தல்கள் உள்­ளன. ஒரு வகையில் மக்­களின் கருத்து சுதந்­தி­ரத்தை  வெளிப்­ப­டுத்தும் பொறி­மு­றை­யா­கவும் தேர்­தல்கள் விளங்­கு­கின்­றன. தேர்­தல்­கால செயற்­பா­டு­களை  அறிக்­கை­யி­டு­வதும் அதை மக்கள் மத்­தியில் கொண்டு சேர்ப்­ப­துவும் ஊட­கங்­களின் முன் உள்ள சவா­லாகும். இதை அரச ஊட­கங்கள் முறை­யாக முன்­னெ­டுப்­ப­தில்லை.

மூன்­றா­வ­தாக, ஊடக சுதந்­தி­ரத்தை உறுதி செய்­வதில்  நாட்டின் தலை­மைத்­து­வத்தின் வகி­பாகம் பற்றி பேசப்­ப­டு­கின்­றது.

கருத்துச் சுதந்­திரம் என்­பது ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மாத்­தி­ர­மா­ன­தல்­ல. அது அனைத்து நாட்டு மக்­க­ளுக்கும் உரித்­து­டை­யது என்­பதை விளங்­கிக்­கொள்ளும் தலை­மைத்­து­வங்கள் உள்ள நாடுகள் மிகவும் குறை­வாகும்.  அபி­வி­ருத்­தி­ய­டைந்த  ஜன­நா­யக பண்­பு­களை அதிகம் கொண்டு விளங்கும் லத்தீன் அமெ­ரிக்க நாடுகள் மற்றும் கரீ­பியன் பிராந்­திய நாடு­க­ளி­லேயே ஊட­க­வி­ய­லா­ளர்கள் அதிகம் கொலை செய்­யப்­ப­டு­கின்­றனர் என்­கி­றது ஆய்வு.

ஐக்­கிய நாடுகள் சபையின் கலை ,கலா­சார பிரி­வான யுனெஸ்­கோவின் அறிக்கை இதற்கு கட்­டியம் கூறு­கின்­றது.  1993 ஆம் ஆண்டு முதல் இது வரை உலகில் சுமார் 1,600 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். செய்­தி­களை அறிக்­கை­யிட்­ட­தற்­கா­கவும் மக்­க­ளிடம் தக­வல்­களை கொண்டு சேர்த்­த­தற்­கா­க­வுமே இவர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். மிகவும் வேத­னை­யான விடயம் என்­ன­வெனில் இந்த சம்­ப­வங்­களில் பத்தில் ஒன்­பது வழக்­கு­களில் இன்னும் கொலை­யா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றனர்.

யுனெஸ்கோ அறிக்கை மிக முக்­கி­ய­மான ஒரு விட­யத்தை இங்கு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அதா­வது தண்­ட­னை­யின்­மையே ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் அதி­க­ரிக்­கவும் காரணம் என அது கூறு­கின்­றது. எனவே இது நீதித்­துறை அமைப்பின் செயற்­பா­டு­களின் சிதை­வு­களின் அறி­குறி  என அது வர்­ணித்­துள்­ளது.  இதே வேளை பெண் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்தல் இங்கு விசே­ட­மாக கூறப்­பட்­டுள்­ளது. உல­க­ளா­விய ரீதியில் பெண் பத்­தி­ரி­கை­யா­ளர்­களில் 73 வீத­மானோர் தமது தொழில் தொடர்பில் இணைய அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உட்­பட்­டுள்­ளனர் என்றும் யுனெஸ்கோ கூறு­கின்­றது.

இலங்­கையில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான  செயற்­பா­டுகளுக்கு  கார­ண­மான எவரும் இது வரையில் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. இது வரையில்  இரண்டே இரண்டு   வழக்­கு­களே விசா­ரணை கட்­டங்­களை எட்­டி­யுள்­ளன.  முத­லா­வது 2000 ஆம் ஆண்டு ஒக்­டோ­பரில்  யாழில் படு­கொலை செய்­யப்­பட்ட மயில்­வா­கனம் நிம­ல­ரா­ஜனின்வழக்கு.

எனினும் இந்த சம்­ப­வத்தில்  குற்­றஞ்­சாட்­டப்­பட்ட சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடர வேண்டாம் என நீதி­மன்­றங்­க­ளுக்கு  அறி­வு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்கள் செய்­திகள் வெளி­யிட்­டி­ருந்­தன. இரண்­டா­வது சம்­பவம்  2010 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் காணாமல் போன  கருத்­துப்­பட ஓவியர் பிரகீத் எக்­ன­லி­யா­கொ­டவின் வழக்கு. அவ­ரது மனைவி சந்­தி­யாவின் பெரும் போராட்­டத்தின் பய­னாக  இரா­ணுவ வீரர்கள் சில­ருக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு அதில் ஒன்­பது பேருக்கு எதி­ராக குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது.

எனினும் 2019 இற்­குப்­பி­றகு மீண்டும் ராஜபக் ஷவி­னரின் கைக­ளுக்குள் அதி­காரம் வந்த பிறகு, இராணுவ வீரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் தொடர மாட்டோம் என்ற வாக்குறுதிகளை அவர்கள் சிங்கள மக்களுக்கு வழங்கியிருந்தனர்.  இதன் காரணமாக இந்த வழக்கும் இழுபறி நிலையிலேயே உள்ளது. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாளன்றே எக்னலியாகொட காணாமால் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.  இலங்கையின்   ஊடக  ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலவீனமாக  இந்த சம்பவங்கள் உள்ளன.

மேலும் தமிழ் ஊடவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய விசாரணைகள் பூஜ்ய நிலையிலேயே உள்ளன. ஊடக அமைப்புகளும் இவ்விடயத்தில் எத்தனைப் போராட்டங்கள் , நகர்வுகளை முன்னெடுத்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழிகளில் நெருக்குவாரங்களை கொடுக்க அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது.

அமெரிக்க பத்திரிகையாளர் வோல்டர் குரோன்கைட் கூறுவது போன்று ஊடக சுதந்திரம்  என்பது ஜனநாயகத்தின் பண்பாக பார்க்கப்படுவது அல்ல, ஊடக சுதந்திரம் என்பது தான் ஜனநாயகம் என்ற கருத்துக்கமைய உலக நாடுகள் ஜனநாயகத்தை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் நான்காவது தூணை அசைத்துப்பார்க்க நினைப்பது ஜனநாயகத்தை நிலைகுலைய செய்வதற்கு சமனாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மைக்காக மௌனமாக்கப்பட்டார்:பத்திரிகையாளர் சுகிர்தராஜனிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது.

2025-01-24 20:40:09
news-image

அமைதியான தொற்றுநோயாக  மாணவர்களிடையே காணப்படும் மனநலச்...

2025-01-24 13:53:49
news-image

யாழ்ப்பாண கலாசார மையத்தின் பெயர் திடீரென்று...

2025-01-24 13:31:38
news-image

விவசாய தொழில்முனைவு / வேளாண்மை நோக்கி...

2025-01-23 16:12:24
news-image

புதிய அரசியலமைப்பில் செனட் சபை? தவறுகளிலிருந்து...

2025-01-23 16:49:05
news-image

இலங்கையில் சமூக பணி

2025-01-23 11:56:18
news-image

'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர்...

2025-01-23 10:45:23
news-image

சர்வதேச உதவிகளை அவற்றின் தகுதியின் அடிப்படையில்...

2025-01-22 11:00:46
news-image

கெரவலப்பிட்டிய, புளுமென்டல் பகுதிகளில் புதிய கொள்கலன்...

2025-01-21 16:42:53
news-image

நுவரெலியாவையும் யாழ்ப்பாணத்தையும் பஸ் மார்க்கத்தால் இணைக்கும்...

2025-01-21 19:49:27
news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15