ஊழலில் ஈடுபட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சர் ரமேஷ் பத்திரண நடவடிக்கை எடுக்க வேண்டும் - காவிந்த ஜயவர்தன வலியுறுத்தல்

Published By: Vishnu

26 Oct, 2023 | 11:20 PM
image

(எம்.மனோசித்ரா)

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக தற்போதைய அமைச்சர் ரமேஷ் பத்திரண சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை வலியுறுத்திய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான எம்மால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அன்று அதில் நாம் குறிப்பிட்ட காரணிகள் உண்மை என்பது தற்போது நிரூபனமாகியுள்ளது. அது மாத்திரம் போதாது. எம்மால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அமைச்சர் மாற்றப்பட்டுள்ள போதிலும், அவருடன் இணைந்து ஊழல், மோசடிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எவரும் மாற்றப்படவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று தற்போதைய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் கேள்வியெழுப்புகின்றோம். அப்பாவி மக்களின் வரிப்பணமே இவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 65 000க்கும் அதிகமான சிறுவர்கள் மந்த போஷனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பில் தற்போதைய சுகாதார அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் உணர்வெழுச்சியுடன் வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கொள்கைப்...

2025-05-18 13:14:07
news-image

கொழும்பிலுள்ள சமிக்ஞை கோபுரத்தில் ஏறி ஓய்வுபெற்ற...

2025-05-18 13:08:24
news-image

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் நடைபெற்ற...

2025-05-18 13:03:36
news-image

தம்பலகாமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கி...

2025-05-18 13:00:53
news-image

கொழும்பில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:23:32
news-image

ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறார்களை போர் என்ற...

2025-05-18 12:53:48
news-image

யாழில் 119 க்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு

2025-05-18 12:09:35
news-image

பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சி பெற்ற முள்ளிவாய்க்கால்...

2025-05-18 12:21:04
news-image

சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர்

2025-05-18 11:25:26
news-image

போரில் படுகொலைசெய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து வலிகாமம்...

2025-05-18 11:53:48
news-image

யாழில். திருமணமாகி இரு வாரத்தில் பெண்...

2025-05-18 11:07:32
news-image

செம்மணியில் மனித புதைக்குழி எனும் சந்தேகத்தில்...

2025-05-18 12:32:45