பதவிக்கு வந்து சொத்து விபரங்களை சமர்ப்பித்த ஒரே ஜனாதிபதி நானே

Published By: Raam

17 Feb, 2017 | 04:13 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)
தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி அரச சார்பற்ற அமைப்பொன்று எனது சொத்து விபரங்கள் கோரியுள்ளன. எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய  எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை. ஜனாதிபதியின் சொத்து விபரங்களை கோருவதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லாத போதும் ஜனாதிபதி பொறுப்பேற்று 2 வருடத்திற்கான சொத்து விபரங்களை சமர்ப்பித்த நாட்டின் ஒரே ஜனாதிபதி நானேயாகும். இருப்பினும் எனது சொத்து விபரங்கள் தேவையாயின் தேர்தல் ஆணையாளரை அணுகி பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் தற்போது நாட்டில் ஜனநாயக உரிமையை துட்சமாக மதித்து ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரத போராட்டங்களும் நடந்து கொண்ட வண்ணமே உள்ளன. கொழும்பில் ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளன. நாம் வழங்கிய சுதந்திரத்தை பிரயோசமான முறையில் பயன்படுத்த வேண்டும் இப்படியொரு சுதந்திரம் ஏன் வழங்கப்பட்டது என்பதனை தெரிந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

நாட்டின் கடந்த கால ஆட்சிகளை பார்க்கிலும் நேர்மையுடன் கூடிய மாற்று ஆட்சியை கொண்டு செல்வதற்கே மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். ஆகவே முன்னைய ஆட்சியில் நடந்த குற்றங்கள் இந்த ஆட்சியில் நடைபெறா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

தகவல் அறியும் உரிமையை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வு பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகள் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51