குடு சலிந்துவின் உதவியாளர் கைது

Published By: Digital Desk 3

25 Oct, 2023 | 03:10 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

பாணந்துறை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, அலுப்போமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

எவ்வாறாயினும் குறித்த சந்தேகநபர் திட்டமிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய “குடுசலிந்து” என்பவரின் பிரதான உதவியாளர் எனவும் வெளிநாட்டிலிருந்து கொண்டு நாட்டில் போதைப்பொருள்  வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிலங்க என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 2 கோடி ரூபாவுக்கும் அதிக என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சேறு பூசலை பிரத்தியேக நாமமாக பயன்படுத்த...

2025-02-06 17:18:25
news-image

பதவி விலகவுள்ள ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-06 16:48:03
news-image

டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச்...

2025-02-06 20:52:31
news-image

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும்...

2025-02-06 20:42:13
news-image

''நடுவே பாய வேண்டாம்'' பிரதி சபாநாயகரை...

2025-02-06 19:11:52
news-image

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில்...

2025-02-06 14:33:26
news-image

புதிய முப்படைத் தளபதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர் 

2025-02-06 19:24:44
news-image

விசர்நாய்க்கடி நோய் உயிரிழப்புக்கள் வீழ்ச்சி ;...

2025-02-06 13:33:37
news-image

கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

2025-02-06 18:56:37
news-image

வளி மாசடைதல் காரணமாக வருடாந்தம் சுமார்...

2025-02-06 18:41:20
news-image

சபாநாயகர், பிரதி சபாநாயகரைச் சந்தித்தார் துருக்கித்...

2025-02-06 18:19:22
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின்...

2025-02-06 17:23:17