அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்கள் ஏமாற்றத்துடன் செல்வதை ஏற்க முடியாது : மத்திய மாகாண ஆளுநருக்கு அமைச்சர் அரவிந்தகுமார் அறிவுறுத்தல்

23 Oct, 2023 | 12:25 PM
image

மத்திய மாகாணத்தின் அரச அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் முகங்கொடுத்து வருவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் சடுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மத்திய மாகாணத்தில் அரச அலுவலகங்களில் பொதுமக்கள் தொடர்பாடல் தினமாக திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொதுமக்கள் திங்கட்கிழமைகளில் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக வருகை தருவது வழக்கமாக உள்ளது.

எனினும், மத்திய மாகாணத்தில் திங்கட்கிழமைகளில் அரச அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வெவ்வேறு பணிகள் பணிக்கப்படுவதாலும் செயலமர்வுகள், கலந்துரையாடல்கள் மற்றும் முக்கியமான கூட்டங்களில் பங்கேற்க வேண்டி நேர்வதாலும் அரச அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அது மாத்திரமன்றி, அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சந்தர்ப்பங்களும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

அரச அலுவலகங்களையும் அரச அலுவலர்களையும் நம்பி வரும் பொது மக்கள் ஏமாற்றப்படக்கூடாது என்பது எனது நிலைப்பாடு. அவர்களது தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இத்தகைய அசமந்த போக்குகளுக்கு இடமளிக்க முடியாது என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.

எனவே, பொதுமக்கள் தொடர்பாடல் தினமான திங்கட்கிழமைகளில் அரச அதிகாரிகள் மற்றும் அரச அலுவலர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதையோ கூட்டங்களில் மற்றும் செயல் அமர்வுகளில் பங்குபற்றுதலை தவிர்த்திருக்கும் வகையிலோ அல்லது திங்கட்கிழமைகளில் அவ்வாறான கூட்டங்கள், செயலமர்வுகள் மற்றும் கலந்துரையாடல்களை தவிர்த்திருப்பதற்கு மத்திய மாகாண ஆளுநர் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். 

மேலும், இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாணத்தின் அனைத்து அரசு அலுவலகங்களையும் அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏனைய கட்சிகளில் தேர்தல் கேட்பதற்கு வேட்பாளர்கள்...

2025-03-17 16:50:49
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி எமது...

2025-03-17 16:48:51
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32