அச்சுறுத்தல்கள் தொடர்கின்றனவா?

Published By: Vishnu

22 Oct, 2023 | 06:16 PM
image

சுபத்ரா

கோட்­டா­பய, மஹிந்த ராஜபக்ஷவின் பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கால­கட்­டத்தில், சர்வ வல்­லமை பெற்­ற­வ­ராக விளங்­கினார்.

அப்­போது, ஜனா­தி­ப­தி­யாக இருந்­தவர் அவ­ரது அண்ணன் மஹிந்த ராஜ­பக்ஷ. அவரின் ஏனைய சகோ­த­ரர்­க­ளான சமல் ராஜ­பக்ஷ மற்றும், பசில் ராஜ­பக்ஷ ஆகியோர் அமைச்­சர்­க­ளாக இருந்­தனர்.

இவ்­வா­றான நிலையில் அதி­கா­ரத்­துவக் குடும்­பத்தைச் சேர்ந்த கோட்­டா­பய ராஜபக்ஷ, அமைச்­சர்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும்  சிம்­ம­சொப்­ப­ன­மாக விளங்­கினார்.

மஹிந்த ராஜ­பக்ஷ தங்­க­ளுடன் பேசிக் கொண்­டி­ருக்கும் போது, கோட்டா வரு­கிறார் என்று கூறி, பேச்சை மாற்றிக் கொண்டார், குரலை தாழ்த்திக் கொண்டார் என்றும் சிலர் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

மஹிந்த ராஜ­பக்ஷவின் அர­சாங்­கத்தில் பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோட்­டா­பய ராஜ­பக்ஷ, அர­சாங்­கத்தில் முழு அதி­கா­ரத்­தையும் கொண்­டி­ருந்தார் என்­ப­தையே அந்தக் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

கோட்­டா­பய ராஜ­பக்ஷவை மீறி எதையும் செய்ய முடி­யாத நிலை அப்­போது காணப்­பட்­டது என்­பதை, அர­சாங்­கத்தில் இருந்­த­வர்கள் இன்­றைக்கும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் இருக்­கி­றார்கள்.

அதனால் தான், அர­சாங்க காரி­யங்­களை நிறை­வேற்­று­வ­தற்கு பலரும் அவ­ரது காலைச் சுற்றிக் கொண்­டி­ருந்­தனர்.

அப்­போது பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோட்­டா­பய ராஜ­பக்ஷ  பின்னர் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கி­யதும், அந்­த­ள­வுக்கு கண்­டிப்­புடன் நடந்து கொண்டார் எனக் கூற­மு­டி­யாது.

அவ­ரது முடி­வுகள், நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது உண்மை. ஆனாலும், அவர் பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்­த­போது நடந்து கொண்­டது போல, ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது நடந்து கொள்­ள­வில்லை.

அண்­மையில் செவ்வி ஒன்றை வழங்­கி­யி­ருந்த ராஜ­பக்ஷ விசு­வா­சி­களில் ஒரு­வ­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.சந்­தி­ர­சேன, “கோட்­டா­பய ராஜ­பக்ஷ  பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த போது செயற்­பட்­டது போன்று திற­மை­யாகச் செயற்­ப­டுவார் என்று எதிர்­பார்த்து ஏமாந்து விட்டோம்.

அவர் பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்­த­போது செயற்­பட்­டது போல செயற்­பட்­டி­ருந்தால் நாடும், மக்­களும், கட்­சியும் நாங்­களும் காப்­பாற்­றப்­பட்­டி­ருப்போம்” என்று கூறி­யி­ருந்தார்.

அதா­வது, பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த கோட்­டா­பய ராஜ­பக்ஷவிடம் காணப்­பட்ட இறுக்கம் ஜனா­தி­ப­தி­யா­கிய பின்னர் இருக்­க­வில்லை என்­பதே முக்­கி­ய­மான குறை­பா­டாக ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­ன­ராலும், ராஜ­பக் ஷ  குடும்ப விசு­வா­சி­க­ளாலும், சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

அந்தக் கால­கட்­டத்தில் கோட்­டா­பய ராஜ­பக்ஷ ஜன­நா­யகம், மனித உரி­மைகள், பற்­றி­யெல்லாம் கவ­லைப்­ப­ட­வில்லை. அவர் எடுத்த தீர்­மா­னங்­களை குறித்து யாரும் குறுக்கே பேச முடி­யாது.

அவரை எதிர்த்­த­வர்­களின் நிலையும் அவரை அம்­ப­லப்­ப­டுத்த முயன்­ற­வர்­களின் நிலையும் என்­ன­வா­னது என்­பது அனை­வ­ருக்கும் தெரிந்­தது தான்.

கோட்­டா­பய ராஜ­பக் ஷவின் பலமும் பல­வீ­னமும் அதுதான். அந்த அதி­கா­ரத்­துவம் தான் அவரை ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெறும் நிலைக்கும் கொண்டு சென்­றது, அவரை அந்தப் பத­வியில் இருந்து துரத்­தி­ய­டிக்கும் நிலைக்கும் வித்­திட்­டது.

கோட்­டா­பய ராஜ­பக் ஷ இப்­போது அர­சியல் அரங்கில் ஒதுங்­கி­யி­ருக்­கிறார். ஆனாலும், அவ­ரது பாணியில் அவ­ரது எச்­சங்­களின் அதி­கா­ரத்­துவம் அர­சாங்­கத்தில்  இன்­னமும் முற்­றாக நீங்கி விட­வில்லை.

தற்­போது பாது­காப்புச் செய­லா­ள­ராக இருக்கும் ஜெனரல் கமல் குண­ரட்ண, கோட்­டா­பய ராஜ­பக்ஷவினால் இந்தப் பத­விக்குக் கொண்டு வரப்­பட்­டவர் என்­பது அனை­வ­ருக்கும் தெரிந்­தது தான்.

இறு­திக்­கட்டப் போரில், இரா­ணு­வத்தின் 53 ஆவது டிவி­ச­னுக்குத் தலைமை தாங்­கிய ஜெனரல் கமல் குண­ரட்ண, மீது போர்க்­குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

இறுதிப் போரின் போது, ஜெனரல் கமல் குண­ரட்ண, ஜெனரல் சவேந்­திர சில்வா ஆகி­யோ­ருடன் கோட்­டா­பய  ராஜ­பக் ஷ நேர­டி­யான தொடர்­பு­களை வைத்­தி­ருந்தார் என்றும், போர் நெறி­மு­றை­க­ளுக்கு முர­ணான செயற்­பா­டு­களை அவர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

கோட்­டா­பய ராஜ­பக் ஷ  கஜபா ரெஜி­மென்டில் முத­லா­வது பற்­றா­லி­யனின் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்த காலத்தில் இருந்து, அவ­ருக்கு கீழ் இள­நிலை அதி­கா­ரி­யாக பணி­யாற்­றி­யவர் கமல் குண­ரட்ண. ஜெனரல் சவேந்­திர சில்­வாவும் அவ்­வா­றான தொடர்பில் இருந்­தவர் தான்.

அந்த நெருக்­கத்தின் தொடர்ச்­சி­யா­கவும், இறுதிப் போர்க்­கால சம்­ப­வங்கள் குறித்த குற்­றச்­சாட்­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்­த­வர்கள் என்ற வகை­யிலும், கோட்­டா­பய  ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் மாத்­தி­ர­மன்றி, அவ­ருக்குப் பின்­னரும் கூட பாது­காப்புச் செய­லா­ள­ராக இருக்கும் வாய்ப்பு ஜெனரல் கமல் குண­ரட்­ண­வுக்குக் கிடைத்­தி­ருந்­தது.

ஜெனரல் கமல் குண­ரட்­ண­வுக்கு அமெ­ரிக்கா அதி­கா­ர­பூர்­வ­மற்ற பய­ணத்­த­டையை விதித்­தி­ருக்­கின்ற போதும், அவரை பாது­காப்புச் செய­லா­ள­ராக தொடர்ந்து வைத்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

இவ்­வா­றான நிலையில் தான், ஜெனரல் கமல் குண­ரட்­ணவும், இரா­ணுவத் தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் விக்கும் லிய­ன­கேயும் (இவரும் கஜபா ரெஜி­மென்ட்டை சேர்ந்­தவர் தான்) நாடா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நடந்த பாது­காப்புத் தொடர்­பான மேற்­பார்வைக் குழுவின் கூட்­டத்தில், தனக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தனர் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருக்­கிறார் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­திம வீரக்­கொடி.

முன்னாள் அமைச்­ச­ரான சந்­திம வீரக்­கொடி, போர்க்­கா­லத்தில் இரா­ணு­வத்தை ஆத­ரித்­தவர், போருக்குப் பின்னர், இரா­ணு­வத்தின் மீதான குற்­றச்­சா­ட்டு­களை நிரா­க­ரித்­தவர்.

அவ்­வா­றான ஒருவர் இன்று பாது­காப்புச் செய­லாளர் மீதும் இரா­ணுவத் தள­ப­தியின் மீதும் இந்தக் குற்­றச்­சாட்­டு­களை கூறி­யி­ருக்­கிறார்.

பாது­காப்புத் தொடர்­பான மேற்­பார்வைக் குழுவின் கூட்­டத்தில், படைக்­கு­றைப்பு பற்­றிய கலந்­து­ரை­யாடல் நடந்து கொண்­டி­ருந்த போது, படை உயர் அதி­கா­ரிகள், அர­சாங்க நிதியை வீண் விரயம் செய்­வ­தாக குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார் சந்­திம வீரக்­கொடி.

அப்­போதே தனக்கு பாது­காப்புச் செய­லாளர் மற்றும் இரா­ணுவத் தள­ப­தி­யினால் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­ட­தாக சந்­திம வீரக்­கொடி சபா­நா­ய­க­ரிடம் முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

இந்த விவ­காரம் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் பேசிய சந்­திம வீரக்­கொடி, பாது­காப்புக் குறித்த மேற்­பார்வைக் குழுவின் கூட்­டத்தில் நடந்த உண்­மை­களை அறிந்து கொள்­வ­தற்கு, அது தொடர்­பான காணொ­ளியை தெரி­வுக்­கு­ழு­விடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

ஆனால், சபா­நா­யகர் அதற்கு இணங்­க­வில்லை. அதனை வெளி­யிட மறுத்­து­விட்டார்.

அதே­வேளை, இரா­ணுவ அதி­கா­ரி­களைக் குற்­றம்­சாட்­டிய சந்­திம வீரக்­கொ­டியை பாது­காப்புக் குறித்த மேற்­பார்வைக் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று, குழுவின் தலை­வ­ரான சரத் வீர­சே­கர கோரி­யி­ருப்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது.

இவ்­வா­றான நிலையில் தான், பாது­காப்புச் செய­லாளர் தெரி­வுக்­கு­ழுவில் முன்­னி­லை­யா­வ­தற்கு, அடிக்­கடி பாரா­ளு­மன்றம் வரவேண்டும் என்­பதால், தெரி­வுக்­குழு கூட்­டத்­துக்கு தங்­களின் மெய்க்­கா­வ­லர்கள் சகிதம் பங்­கேற்க அனு­ம­திக்க வேண்டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறார்.

பாது­காப்புச் செய­லா­ளரால் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது, அவரால் தங்­களின் பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்தல் ஏற்­ப­டலாம் என்­பது தான் இந்தக் கோரிக்­கைக்குக் காரணம்.

நாட்டின் பாது­காப்புச் செய­லா­ளரே, பாரா­ளு­மன்­றத்­துக்குள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் அச்­சு­றுத்­த­லாக பார்க்­கப்­படும் நிலை காணப்­ப­டு­கி­றது.

இது ஜன­நா­யக அமைப்­புக்கு உள்ள மிகப்­பெ­ரிய சவால். பாரா­ளு­மன்றம் தான், நாட்டின் ஜன­நா­ய­கத்தின் உயர் அதி­காரம் கொண்ட அமைப்பு.

அங்­கேயே பாரா­ளு­மன்­றத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பாது­காப்­பற்ற நிலை உள்­ளது என்­பதும், அங்­கேயே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­கி­றது என்­பதும், அதையும் அதி­கா­ரத்தில் உள்ளவர்களே முன்னெடுக்கின்றனர் என்பதும் மோசமான ஜனநாயக நிலையின் வெளிப்பாடு.

சந்திம வீரக்கொடிக்கு மாத்திரம் தான் இந்த நிலை என்றில்லை.சில வாரங்களுக்கு முன்னர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், நீதிபதி சரவணராஜாவை அச்சுறுத்தும் வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர உரையாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றமே பாதுகாப்பு அச்சுறுத்த ல் விடுக்கப்படும் களமாக மாறிக் கொண்டிருக்கிறது.

மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.இது ஜனநாயகத்துக்கான உச்சக்கட்ட அச்சுறுத்தல். இந்த அச்சுறுத்தல் கோட்டாபய ராஜ­பக் ஷவின் காலத்தில் ஆரம்பித்தது. அப்போதே இந்த அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால், அவரது எச்சங்களாக இருக்கும் நபர்கள் இன்றைக்கு பாராளுமன்றத்துக்குள்ளேயே வாலாட்டுகின்ற நிலை வந்திருக்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15