பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆபத்தானது

Published By: Vishnu

22 Oct, 2023 | 06:18 PM
image

எம்.எஸ்.தீன்

இலங்­கையில் நடை­மு­றையில் உள்ள பயங்­க­ர­வாதச் தடைச் சட்­ட­மா­னது பல வகை­யிலும் மனித உரி­மை­க­ளுக்கு முர­ணா­ன­தாக அமைந்­துள்­ளது. இச்­சட்ட மூலம் சிறு­பான்மை மக்­களின் உரி­மைக்­கான போராட்­டங்­களை நசுக்­கு­வ­தற்கும், இச்­சட்ட மூலத்தின் கீழ் கைது செய்­யப்­ப­டு­கின்­ற­வர்­களை விசா­ர­ணை­க­ளின்றி நீண்ட கால­மாக தடுத்து வைப்­ப­தற்கும் முடி­யு­மாக இருந்­தது. இச்­சட்ட மூலத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட பலர் வருடக் கணக்கில் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளார்கள்.

இச்­சட்­டத்தின் கொடூ­ரத்தை கவ­னத்திற் கொண்டு, பயங்­க­ர­வாதச் தடைச் சட்­டத்தில் மனித உரி­மை­களை பாது­காக்கக் கூடிய வகை­யிலும், ஜன­நா­ய­கத்தை பேணும் வகை­யிலும் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்று உள்­நாட்­டிலும் குறிப்­பாக தமி­ழர்கள் தரப்­பிலும், சர்­வ­தேச மட்­டங்­க­ளிலும் தெரி­விக்­கப்­பட்­டன.

இதனால், இலங்கை அர­சாங்கம், பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூல­மொன்­றினை புதி­தாக முன்­மொ­ழிந்­தது. இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் கடந்த மார்ச் 20ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. இச்­சட்ட மூலத்தில் உள்ள முன்­மொ­ழி­வுகள் ஏற்­கெ­னவே உள்ள பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை விடவும் மோச­மான முன்­மொ­ழி­வு­களைக் கொண்­டுள்­ளன. அர­சாங்­கத்தை ஜன­நா­யக அடிப்­ப­டையில் விமர்­சனம் செய்­கின்­ற­வர்­க­ளையும், அர­சாங்­கத்தைக் கண்­டித்து போராட்­டங்­களை நடத்­து­கின்­ற­வர்­களை கைது செய்­வ­தற்கும், மனித உரி­மை­களை மீறும் வகை­யிலும் அமைந்­துள்­ளது. பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் போது இலங்கை சர்­வ­தேச நாடு­க­ளு­ட­னான உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் என்று ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுஹைர் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார்.

அர­சாங்­கத்­தினால் முன்­மொ­ழி­யப்­பட்ட பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்­திற்கு சட்­டத்­த­ர­ணி­களும், பொது அமைப்­புக்­களைச் சேர்ந்தவர்களும்  தமது எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­டனர். ஐ.நா உட்­பட சர்­வ­தேச அமைப்­புக்­களும் இச்­சட்டமூல­  மும்­மொ­ழி­வு­களை மாற்­றி­ய­மைக்­கு­மாறும், அந்த மாற்­றங்கள் ஜன­நா­ய­கத்­தையும், மனித உரி­மை­களை பேணும் வகை­யிலும் அமைந்­தி­ருக்க வேண்­மென்று இலங்கை அர­சாங்­கத்தை கேட்டுக் கொண்­டன.

இவ்­வா­றான எதிர்ப்­புக்­களை கவ­னத்திற் கொண்ட இலங்கை அர­சாங்கம் ஏற்­கெ­னவே முன்­மொ­ழி­யப்­பட்­ட­வை­களில் திருத்­தங்­களை மேற்­கொண்டு கடந்த செப்­டம்பர் 15ஆம் திகதி வர்த்­த­மா­னியை வெளி­யிட்­டது.  

இவ்­வாறு திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட முன்­மொ­ழி­வுகள் குறித்து ஐ.நாவின் நிபு­ணர்கள் மற்றும் விசேட அறிக்­கை­யா­ளர்கள் தமது எதிர்ப்­புக்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட மூல­மா­னது ஏற்­கெ­னவே நடை­மு­றை­யி­லுள்ள மிக­ மோ­ச­மான பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­ய­வில்லை. இச்­சட்ட மூலத்தின் பெரும்­பா­லான சரத்­துக்கள் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்குப் பின்­பற்­றப்­பட வேண்­டிய சட்­டத்தின் ஆட்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட செயன்­ மு­றைக்கு முற்­றிலும் மாறு­பட்­ட­வை­யா­கவே அமைந்­தி­ருப்­ப­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

ஆட்­சி­யா­ளர்கள் காலத்­திற்கு காலம் சட்ட மூலங்­களை கொண்டு வந்­துள்­ளார்கள். அவ்­வாறு கொண்டு வரப்­பட்ட பல சட்ட மூலங்கள் ஆட்­சி­யா­ளர்­களை வலுப்­ப­டுத்­தவும், சிறு­பான்­மை­யி­னரை அடக்கி ஒடுக்­கவும், மனித உரி­மை­களை மீறும் வகை­யிலும் அமைந்­துள்­ளன. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தினால் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் வடக்கு, கிழக்கு தமி­ழர்கள்.

நாட்டில் நடை­பெற்ற உள்­நாட்டு யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­காக வகை­தொ­கை­யின்றி தமி­ழர்கள் பலரும் கைது செய்­யப்­பட்­டனர். இதன்­போது தமிழ் அர­சியல் கட்­சி­களும், அமைப்­புக்­களும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு எதி­ராக போராட்­டங்­களை மேற்­கொண்­டன. ஆனால், சிங்­க­ள­வர்­களும், முஸ்­லிம்­களும் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் குறித்து பெரிய அளவில்  எதிர்ப்­புக்­களை காட்­ட­வில்லை.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­னரும், ‘அர­க­லய’ போராட்­டத்தின் பின்­னரும் முஸ்­லிம்­களும், சிங்­க­ள­வர்­களும் அதிக அளவில் கைது செய்­யப்­பட்­டனர். இதன் போதுதான் இச்­சட்ட மூலத்தின் ஆபத்தை  சிங்­க­ள­வர்­களும், முஸ்­லிம்­களும் உணரத் தொடங்­கினர். தமது எதிர்ப்­பு­க­ளையும் வெளி­யிட்­டனர்.

இந்தப் பின்­ன­ணியில் சர்­வ­தேச நாடு­களும், அமைப்­புக்­களும் தங்­களின் கவ­னத்தை பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் மீது செலுத்­தி­யது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை மாற்­றி­ய­மைத்து சர்­வ­தேச தரத்­திற்கு அமை­வாக அதனை மாற்­றி­ய­மைக்­கு­மாறு இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுத்­தன.

இந்­நி­லையில் பயங்­க­ர­வாத தடைச் சட்டத்தை எதிர்ப்­போரை ஏமாற்றும் வகை­யிலும், அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டக்­கா­ரர்­களை கைது செய்­வ­தற்கும், நீதித்­து­றையின் அதி­கா­ரத்தை பல­வீ­னப்­ப­டுத்தும் வகை­யிலும், ஆட்­சி­யா­ளர்­களின் கரங்­களை வலுப்­ப­டுத்தும் வகை­யிலும், பொலி­ஸா­ருக்கு அதிக அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கும், ஜனா­தி­ப­திக்கு அதி­உச்ச அதி­கா­ரங்­களை கொடுக்­கவும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­திற்கு பதி­லாக பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூல முன்­மொ­ழி­வு­களை அர­சாங்கம் முன் வைத்­தது. இதற்கு எதிர்ப்­புக்கள் ஏற்­பட்ட போது, மீண்டும் திருத்­தங்­க­ளுடன் அதனை முன் வைத்த போதிலும் அதனை ஏற்றுக் கொள்ள முடி­யா­தென்ற நிலைப்­பாட்டை முன்னிறுத்தி இலங்­கையில் உள்ள பல அர­சியல் கட்­சிகளும்  , ஐ.நா உள்­ளிட்ட சர்­வ­தேச அமைப்­புக்­களும் அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ளன.

பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூலத்தை வாபஸ் வாங்­கு­மாறும், வெளிப்­ப­டைத்­தன்மை, பொறுப்­புக்­கூறும் தன்மை மற்றும் சகல தரப்­பி­ன­ரு­ட­னான விரி­வான கலந்­து­ரை­யா­டல்கள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் தயா­ரிக்­கு­மாறு மாற்றுக் கொள்­கை­க­ளுக்­கான நிலையம் அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இதே­வேளை, உத்­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்ட மூலத்தின் பல சரத்­துக்கள் அடிப்­படை சட்­ட­வாக்கக் கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணான வகையில் அமைந்­துள்­ளன.  எனவே அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் மனித உரி­மை­களைப் பாது­காப்­ப­தாக அளித்­தி­ருக்கும் வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்கு இலங்கை இச்­சட்ட வரைபைத் திருத்­தி­ய­மைப்­பது அவ­சி­ய­மென்று சர்­வ­தேச ஜுரர்கள் ஆணைக்­குழு இலங்­கையை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

தடுப்­புக்­காவல் உத்­த­ரவை பரி­சீ­லனை செய்­வ­தற்­கான நீதி­வானின் அதி­காரம் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், 'பயங்­க­ர­வாதம்' எனும் பதத்­திற்­கான பரந்­து­பட்ட வரை­வி­லக்­க­ண­மா­னது அடிப்­படை சட்ட ஆட்சிக் கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணான வகையில் அமைந்­துள்­ளது. எனவே, பிர­ஜை­களின் மனித உரி­மை­களை பாது­காப்­ப­தாக இலங்கை அளித்­துள்ள உறு­தி­மொ­ழியை நிறை­வேற்ற வேண்­டு­மெனில் இச்­சட்­ட­வ­ரைபு மேலும் திருத்­தி­ய­மைக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றும் சர்­வ­தேச ஜுரர்கள் ஆணைக்­குழு இலங்­கையை கேட்டுள்ளது.

இவ்வாறு  அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு பல திசைகளில் இருந்தும் எதிர்ப்புக்கள் உருவாகியுள்ள போதிலும் அரசாங்கம் தமது திட்டத்திலிருந்து விலகிக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த  காலங்களில் கொண்டு வரப்பட்ட சட்ட  மூலங்களின் மூலமாக ஆட்சியாளர்களை வலுப்படுத்தவும், சிறுபான்மையினரை பலவீனப்படுத்தவும் பயன்படுத்தப்பட்ட பங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாகக் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலமானது அமுல்படுத்தப்ப டுமாயின் மூவின மக்களையும் அச்சுறுத்தி ஜனநாயகத்தை அடகு வைத்துவிடும். ஆதலால், இச்சட்ட மூலத்தின் ஆபத்தை, விளைவுகளை கருத்திற் கொண்டு மூவின மக்களின் பிரதிநிதிகளும், கட்சிகளும் சர்வதேசமும், நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியவாறு இச்சட்ட மூலத்தை மாற்றியமைப்பதற்கு அரசு முன்வர வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்க வரி இன்றி UK சந்தை:...

2026-01-25 16:21:25
news-image

பொது அர­சியல் ஆவணம் அவ­சி­யமும் அவ­ச­ரமும்

2026-01-25 16:20:43
news-image

விதைக்காமல் எவ்வாறு அறுவடை செய்வது?

2026-01-25 16:20:26
news-image

புலிகளின் புரியாணியும் முஸ்லிம்களின் கண்ணீரும்

2026-01-25 16:20:10
news-image

உகண்டாவில் ஏழாவது தடவையாக ஜனாதிபதியாகும் முசேவெனி

2026-01-25 15:44:58
news-image

ஈரானில் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த...

2026-01-25 15:38:16
news-image

மூலோபாய உதவியின் நோக்கம் என்ன?

2026-01-25 15:17:08
news-image

'பிரஜாசக்தி' : அரசாங்க அதிகாரத்தை அரசியல்...

2026-01-25 14:13:45
news-image

வடக்கில் பெருந்தொகையானோரின் வாழ்வாதாரம் மிகமோசமாகப் பாதிப்பு...

2026-01-25 14:00:29
news-image

தொடர் போராட்­டத்­துக்குத் தயாரா?

2026-01-25 12:51:37
news-image

மாவிலாறு போல மாறிய தையிட்டி விவகாரம்

2026-01-25 12:33:10
news-image

தமிழ்த் தேசிய போராட்டத்தின் ஆரம்பகர்த்தா முத்துக்குமாரசுவாமி

2026-01-25 12:15:33