படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களின் 7 ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு 

20 Oct, 2023 | 04:45 PM
image

கடந்த 2016 இல் இனப்படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான கஜன், சுலக்ஷன் ஆகியோரது 7 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று (20) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, உயிர் நீத்த மாணவர்களின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி தூவி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து, கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில் குமாரினால் நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது. 

இந்த நினைவேந்தலில் குறித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் நெவில் குமார் மற்றும் பல மாணவர்கள் கலந்துகொண்டனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஐயகுமார் சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர்  20ஆம் திகதி இரவு, கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் வைத்து, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் “மலையகத் தேசியம்...

2025-11-12 10:43:52
news-image

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு மகளிருக்குப்...

2025-11-11 17:22:27
news-image

வெள்ளவத்தையில் புதிதாக திறக்கப்பட்ட வீரகேசரி விளம்பர...

2025-11-11 14:19:39
news-image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பொறுப்புக்கூறலும் ;...

2025-11-11 11:05:45
news-image

இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்'...

2025-11-10 17:27:52
news-image

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு...

2025-11-10 17:23:50
news-image

சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

2025-11-10 16:18:16
news-image

பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

2025-11-10 07:14:11
news-image

குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு நியூ சவுத்...

2025-11-08 19:57:18
news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45