பிரதமரை அவசரமாகச் சந்திக்கின்றன சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகள்

Published By: Priyatharshan

17 Feb, 2017 | 09:34 AM
image

முன்னதாக எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக வர்த்தமானி பிரசுரத்தை வெளியிட்டு புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை கடுமையாக கண்டிப்பதாக சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் அறிவித்திருந்தன. 

கடந்த மாதம் 18ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருசலாமில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆகியன விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தன. 

இச்சந்திப்பின் நிறைவில் மேற்கண்டவாறு கண்டனத்தை வெளியிட்டதோடு குறித்த விடயம் தொடர்பாக மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர்  பைசர் முஸ்தபா சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கு அநீதி இழைக்கும் ஜனநாயக  விரோதமான செயற்பாட்டை கைவிடவேண்டும் என்பதோடு தமது பரிந்துரைகளையும் கவனத்திற் கொண்டு உள்ளீர்க்கப்பட்ட இறுதி அறிக்கையையே வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட வேண்டுமென வலியுறுத்தியிருந்தன. 

இதனையடுத்து அமைச்சர் பைசர் முஸ்தபாவும் குறித்த விடயத்தை கருத்திற் கொள்வதாகவும் சிறு, சிறுபான்மை அரசியல் கட்சிகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் எல்லை மீள்நிர்ணய அறிக்கையை நாளை(இன்று) வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையிலேயே சிறு மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் அவசரமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவிலிருந்து இன்று அதிகாலை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59