பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை : உயர்நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் - அனுரகுமார

Published By: Vishnu

19 Oct, 2023 | 04:11 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கவில்லை, சபைக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதை நீதியமைச்சர் உயர்நீதிமன்றத்துக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2023.10.03 ஆம் திகதி பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் பிரேரணை முன்னறிவித்தல்கள் மற்றும்  தினப்பணிகள் பிரிவில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களை  சபைக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடப்பட்டது.

சட்டமூல சமர்ப்பிப்பு பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்பட்டதன் பின்னர் நாட்டு பிரஜைகள் எவரும் அந்த சட்டமூலத்தை இரண்டு வாரங்களுக்குள் (14 நாட்கள்) உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.ஆனால் முதல் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

'சட்டமூலம் ஒன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டதன் பின்னர் நாட்டு பிரஜைகள் அதை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும் ' என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே  ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ஐந்து மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் சபைக்கு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவில்லை.

சட்டமூலம் ஒன்று பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டதன் பின்னர்  உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியுமா, அல்லது சட்டமூலம் சபைக்கு சமர்ப்பித்ததன் பின்னர் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியுமா? என்ற பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு பிரகாரம் நீதிமன்றம் செயற்படாது.அரசியலமைப்புக்கு அமைவாகவே நீதிமன்றம் செயற்படும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தின் சவாலுக்குட்படுத்தும் காலவகாசத்தை முடக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா ? என்ற சந்தேகம் காணப்படுகிறது.

ஆகவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை நீதியமைச்சர் உயர்நீதிமன்றத்துக்கு உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு படகுகள்...

2026-01-25 11:06:23
news-image

8 கோடி ரூபா பெறுமதியான 'குஷ்'...

2026-01-25 10:46:39
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணிகள்...

2026-01-25 10:27:25
news-image

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து எதிரணியினருடன்...

2026-01-25 10:22:35
news-image

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான...

2026-01-25 10:16:46
news-image

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட...

2026-01-25 10:15:59
news-image

திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20 ஆவது...

2026-01-25 10:12:08
news-image

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை...

2026-01-25 10:03:18
news-image

ஊழல்களை மறைப்பதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம்...

2026-01-25 09:58:46
news-image

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சி...

2026-01-25 09:53:40
news-image

கொழும்பு மாவட்ட அபிவிருத்திப் பணிகள் 97%...

2026-01-25 09:20:13
news-image

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெசல்வத்தே...

2026-01-25 09:19:51